பாலிவுட் நட்சத்திர தம்பதியரான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே இருவரும் மும்பையில் உள்ள அலிபாக் பகுதியில் புது வீடு வாங்கிஉள்ளனர்.
கடற்கரையோரப் பகுதி என்பதால் பெரிய தொழிலதிபர்களும் திரை நட்சத்திரங்களும் அங்கு சொத்துகளை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ரூ.22 கோடி மதிப்பில் புது வீட்டை வாங்கியுள்ள தீபிகாவும் ரன்வீரும் விரைவில் அங்கு குடிபுக உள்ளனராம். தற்போது மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர்.
இது தவிர மும்பை, பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இந்த நட்சத்திர ஜோடி சொத்துகள் வாங்கி வருவதாகத் தகவல்.

