மீண்டும் சவாலான வேடத்தில் ஐஸ்வர்யா

மீண்டும் சவாலான வேடத்தில் ஐஸ்வர்யா

2 mins read
281e7998-03a5-49f2-892e-9ae1883eebe0
-

தாம் நடிக்­கும் ஒவ்­வொரு படம் குறித்­தும் ரசி­கர்­களி­டம் பெரிய எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

அந்த வகை­யில் தினேஷ் லட்­சு­ம­ணன் இயக்­கத்­தில் உரு­வா­கும், இன்­னும் பெய­ரி­டப்­ப­டாத படத்­தி­லும் ஐஸ்­வர்­யா­வுக்கு சவா­லான கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ளது.

அறி­வுத்­தி­றன் குன்­றிய பெண்­ணாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பது எளிதல்ல என்பதை உணர்ந்து, பல விவரங்களை உரியவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டு நடித்துள்ளார்.இதில் நடி­கர் அர்­ஜுன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

"சில குழந்­தை­க­ளுக்­குப் பிறப்­பி­லேயே சில குறை­பா­டு­கள் இருக்­கக்­கூ­டும். என் படத்­தின் கதா­நா­ய­கிக்கு உலக அறிவு குறைவு என­லாம். தன்­னைச் சுற்றி நடப்­பது குறித்து எது­வுமே தெரி­யா­மல் வாழும் ஓர் அப்­பாவி.

"விபத்­தில் சிக்­கும்­போ­தும்­கூட சில குழந்­தை­களுக்கு இவ்­வாறு பிரச்­சினை ஏற்­படும் வாய்ப்­புண்டு என்­கி­றார்­கள் மருத்­து­வர்­கள். அந்த வகை­யில் எனது படத்­தின் நாயகி எத­னால் இவ்­வாறு ஆகி­றார் என்­பது படம் பார்க்­கும்­போது புரி­யும்.

"சில திடீர் திருப்­பங்­கள் கார­ண­மாக நாய­கி­யின் பின்­னணி குறித்து தெரிந்துகொள்ள வேண்­டிய கட்­டா­யம் ஒரு தரப்­புக்கு ஏற்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து புல­னாய்வு அதி­கா­ரி­யாக அர்­ஜுன் நிய­மிக்­கப்­ப­டு­கி­றார். அவர் திரை­யில் தோன்­றிய பின்­னர் ரசி­கர்­கள் பார்க்­கும் ஒவ்­வொரு காட்­சி­யும் மிகுந்த சுவா­ர­சி­யத்­து­டன் கடந்து போகும்.

"இது­போன்ற கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கையாள்­வ­தில் அர்­ஜுன் எந்­த­ளவு திற­மை­சாலி என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். அந்த வகை­யில் இப்­ப­டத்­தின் பல­மாக உள்­ளார். ஐஸ்­வர்யா ராஜேஷ் இது­வரை இப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­தில்லை. அத­னால் அவ­ருக்­கும் இந்­தப் படம் பெரும் திருப்­பு­மு­னை­யாக அமை­யும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் இயக்குநர் தினேஷ் லட்­சு­ம­ணன்.

இவர் தன்­னைத் தேடி வந்து கதையை விவ­ரித்­த­போது, சில நிமி­டங்­க­ளி­லேயே அதன்­பால் ஈர்க்ப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார் இப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ள­ரான அருள்­கு­மார்.

"நீண்­ட­கா­ல­மாக தமி­ழில் இது­போன்ற கதைக்­க­ளத்­து­டன் எந்­தப் பட­மும் வெளி­யா­ன­தாக எனக்­குத் தெரி­ய­வில்லை. தினேஷ் சொன்ன கதை மிக விறு­வி­றுப்­பான ஒன்­றாக இருந்­தது.

"குற்­றம், திகில், எதிர்­பா­ராத முடிச்­சு­கள், புலன் விசா­ரணை, உண்மை என்ற வரி­சை­யில் நக­ரும் காட்­சி­க­ளு­டன் படம் பார்ப்­பது நிச்­ச­ய­மாக ரசி­கர்­க­ளுக்­குப் புது­வித அனு­ப­வத்­தைக் கொடுக்­கும்.

"கொரோனா நெருக்­க­டி­யில் இருந்து மக்­கள் விடு­பட்டு வரும் சூழ­லில் இந்­தப் பட­மும் அவர்­க­ளுக்கு உற்­சா­கம் அளிக்­கும். இந்தப் படம் ஐஸ்வர்யாவுக்கு விருதுகளைப் பெற்றுத் தரும்," என்­கி­றார் தயா­ரிப்­பா­ளர் அருள் குமார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்