மீராவுக்காக காத்திருக்கும் 'பேய காணோம்'

மீராவுக்காக காத்திருக்கும் 'பேய காணோம்'

1 mins read
a3e87fb4-0163-4747-bb32-93a142c61645
படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் செல்வ அன்பரசன், மீரா மிதுன். -

'பேய காணோம்' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் புதுப்­ப­டம் ஒன்று உரு­வா­கிறது. இதில் மீரா மிதுன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார்.

செல்வ அன்­ப­ர­சன் இயக்­கும் இந்­தப் படத்­தின் பணி­கள் மீரா மிது­னால் தடை­பட்டு நிற்­கின்­றன.

வழக்கு ஒன்­றில் சிக்கி சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார் மீரா. அவ­ருக்கு இன்­னும் பிணை கிடைக்­க­வில்லை.

"தலைப்பை போல் படமும் வித்தியாசமாக இருக்கும். வாழ்க்கை­யில் நம்­மில் பலர் பணத்­தைக் காணோம், குழந்­தை­யைக் காணோம், விலை மதிப்­புள்ள பொருள்­க­ளைக் காணோம் என்று பல­வற்­றைத் தேடி இருப்­போம். ஆனால் சிலர் பேயைக் காணோம் என புலம்­பி­ய­படி தேடு­கி­றார்­கள்.

"எதற்­காக இந்­தத் தேடல், இறுதியில் என்ன ஆகிறது, பேய் என்ன செய்கிறது என்­பதை நகைச்­சுவை கலந்து சுவா­ர­சி­ய­மா­கச் சொல்லி இருக்­கி­றோம். 90 விழுக்­காடு படப்­பி­டிப்பு முடிந்­து­விட்­டது," என்­கி­றார் இயக்­கு­நர்.

மீரா பிணை­யில் வெளி­வந்­த­தும் ஒரு வாரத்­துக்­குள் படப்­பிடிப்பு முழுமை அடை­யும் என்­றும் நடப்­பாண்டு இறு­திக்­குள் படம் வெளி­யீடு காணும் என்றும் தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது. , :   