கடந்த ஒரு வாரமாக டெல்லியில் தங்கியுள்ளார் அஜித். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பயிற்சிக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்துள்ளார் அஜித். அங்கு அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன் பேசியதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அஜித், ஆறு பதக்கங்களை வென்று தொழில் ரீதியிலான வீரர்களையே ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் தேசிய அளவிலான போட்டி நடைபெறுகிறது. அதில் பங்கேற்கவே டெல்லியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் திடீரென முடிவு செய்து தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

