சவால்களை வென்ற ஆதி

சவால்களை வென்ற ஆதி

3 mins read
ce81e810-804f-4517-86eb-fe1bb8c736f5
-

"வேலைக்­குப் போகா­மல் ஜாலி­யாக ஊர் சுற்­றிக்­கொண்­டி­ருக்­கும் ஓர் இளை­ஞன் திடீ­ரென ஒரு சப­தம் எடுக்­கி­றான். அது அவ­னது வாழ்க்­கை­யில் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்­ப­து­தான் 'சிவ­கு­மா­ரின் சப­தம்' படத்­தின் கதை," என்­கி­றார் 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி.

இப்­ப­டத்­துக்­கான கதை, திரைக்­கதை, வச­னம், இயக்­கம், தயா­ரிப்பு, இசை என அனைத்­துக்­கும் இவர்­தான் பொறுப்பு. கதை­யின் நாய­க­னும் இவர்­தான்.

இசை­ய­மைப்­பா­ள­ராக திரைப்­ப­ய­ணத்­தைத் தொடங்­கு­வ­தற்கு முன்­பும் பிற­கும் பல்­வேறு போராட்­டங்­க­ளை­யும் சவால்­க­ளை­யும் எதிர்­கொண்டு சாதித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஆதி.

"சினிமா துறை­யில் எனக்கு யாரை­யும் தெரி­யாத நிலை­யில்­தான் அதற்­குள் நுழைந்­தேன். நிறைய அடி­பட்டு, தவ­று­கள் செய்து பல­வற்­றைக் கற்­றுக்­கொண்­டேன்.

"இசை­ய­மைப்­பா­ளராக வேண்­டும் என்று நான் விரும்­பி­யது நடந்­தது. படம் இயக்க வேண்­டும் என்ற கன­வும் கைகூ­டி­யது. நம்மை நம்பி யாரும் வரமாட்­டார்­கள் என்று நினைத்து நானே நாய­க­னாக மாறி­னேன்.

"இப்­போது சத்­ய­ஜோதி என்ற பெரிய தயா­ரிப்பு நிறு­வ­னத்­து­டன் இணைந்து ஒரு திரைப்­ப­டத்தை தயா­ரித்­துள்­ளேன். சினிமா உல­கில் அனைத்துப் பணி­க­ளை­யும் செய்து பார்த்துவிட்டு மன­நி­றைவு உள்­ளது.

"இருப்­பது ஒரு வாழ்க்கை. அதில் முடிந்­த­வரை எல்­லா­வற்­றை­யும் கற்­றுக்­கொள்ள வேண்­டும். 2015ஆம் ஆண்டு திரை­யு­ல­கில் கால்­ப­தித்­தேன். அதுவே தாம­தம் என்று இப்­போது தோன்­று­கிறது," என்­கி­றார் ஆதி.

'சிவ­கு­மா­ரின் சப­தம்' படம் இளை­யர்­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல், அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் கவ­ரும்," என்று குறிப்­பி­டு­ப­வர், காஞ்­சி­பு­ரத்­தில் தாம் சந்­தித்த இளை­ஞர் ஒரு­வரை மன­தில் வைத்து இப்­ப­டத்­துக்­கான கதையை உரு­வாக்­கி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"காஞ்­சி­பு­ரத்­தில் இளை­யர்­க­ளைக் கொண்ட வித்­தி­யா­ச­மான குழு ஒன்று இயங்கி வரு­கிறது. அந்த ஊருக்கு சுற்­று­லாப் பய­ணி­க­ளாக யார் வந்­தா­லும் இந்த குழு­வி­னர் தேடிச் சென்று பேசு­வார்­கள்.

"அந்த பய­ணி­கள் எதை­யெல்­லாம் சுற்­றிப்­பார்க்க விரும்­பு­கி­றார்­கள் என்­ப­தைக் கேட்­ட­றிந்து நல்ல முறை­யில் வழி­ந­டத்து­வார்­கள்.

"நான் ஒரு­முறை அங்கு சென்­ற­போது இந்த குழு­வைச் சேர்ந்த ஒரு­வர் வரு­ப­வர்­க­ளி­டம் எல்­லாம் கல­க­ல­வென்று இயல்­பா­கப் பேசிக் கொண்­டி­ருந்­தார். காஞ்­சி­பு­ரத்­தில் அவ­ருக்­குத் தெரி­யாத இடங்­களே இல்லை என்­பது பேச்­சி­லேயே புரிந்­தது.

"அங்­கு­தான் என் படத்­துக்­கான கதா­நா­ய­கன் உரு­வா­னான். சரி­யாக தலை சீவா­மல், பூப்­போட்ட சட்டை, புல்­லாங்­கு­ழல் வடி­வி­லான கால்­சட்டை என நானும் அந்­தக் குழு­வின் உறுப்­பி­ன­ரைப் போலவே மாறி­விட்­டேன்," என்­கி­றார் ஆதி.

தெலுங்­கில் உரு­வா­கும் 'ஏஜென்ட்' உட்­பட இரண்டு படங்­க­ளுக்­கும் தமி­ழில் ஒரு படத்­துக்­கும் இசை­ய­மைப்­ப­தா­கச் சொல்­ப­வர், நடிப்பு, இசை, இயக்­கம் என அனைத்­தை­யும் முடிந்­த­வரை செய்­வ­து­தான் தமது விருப்­பம் என்­கி­றார்.

"காஞ்­சி­பு­ரத்­தில் நெச­வுத்­தொ­ழி­லில் பலர் ஈடு­பட்­டுள்­ள­னர். அங்­குள்ள ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் இத்­தொ­ழிலை நம்பி உள்­ளன. இந்­தத் தொழி­லில் நிறைய சிர­மங்­கள், சவால்­கள் இருக்­கின்­றன.

"இது­போன்ற விஷ­யங்­க­ளைத் தெரிந்­து­கொள்­வ­தில் எனக்கு ஆர்­வம் அதி­கம். இவற்­றைத்­தான் திரை­யில் காட்ட முற்­ப­டு­கி­றேன். இது­வரை நான் சரி­யாக செயல்­பட்­ட­தா­கவே நினைக்­கி­றேன்.

நடி­கர் விவேக்­கின் மர­ணம் தம்மை வெகு­வாகப் பாதித்­த­தாக குறிப்­பி­டு­ப­வர், அனை­வர் மன­தி­லும் நேர்­மறை சிந்­த­னை­களை விதைத்த அரு­மை­யான கலை­ஞர் விவேக் என்­கி­றார்.

"இதே­போல் இயக்­கு­நர் கே.வி.ஆனந்த் மறை­வும் எதிர்­பா­ராத சோகம். இது­போன்ற இழப்­பு­க­ளைப் பார்க்­கும்­போது நாம் எந்த அளவு ஆசீர்­வ­திக்­கப்­ப­டு­கி­றோம் என்­பது புரி­யும்.

"நாம் அனை­வ­ரும் சில காலம் இருக்­கப் போகி­றோம். அதற்­குள் நாமும் வாழ்க்­கையை அனு­ப­வித்து பிற­ரை­யும் மகிழ்ச்­சி­ப­டுத்த வேண்­டும். கடந்த காலத்­தை­யும் எதிர்­கா­லத்­தை­யும் நினைத்து புலம்­பா­மல் நிகழ்­கா­லத்­தில் உற்­சா­க­மாக இருக்க வேண்­டும்.மேலும், முடிந்தவரை அனைவருக்கும் உதவ வேண்டும்," என்­கி­றார் ஆதி.