விஜய் ஆண்டனி: இயக்குநர்தான் கதாநாயகன்

விஜய் ஆண்டனி: இயக்குநர்தான் கதாநாயகன்

2 mins read
eaf43cd6-a89f-49df-8f1d-f58239fcbf73
-

படிப்­பில் தமக்கு பெரி­தாக ஆர்­வம் இல்லை என்­று 'கோடி­யில் ஒரு­வன்' படத்­தின் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கூறி­னார் விஜய் ஆண்­டனி.

சிறு வய­தில் சரி­யா­கப் படிக்­க­வில்லை என்ற போதி­லும் வாழக்­கை­யில் முன்­னேற வேண்­டும் என்ற துடிப்பு அதி­க­மாக இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"இப்­போது என்­ன­வாக இருக்­கி­றேனோ, அதற்­கான முழு தகுதி எனக்­குக் கிடை­யாது. சரி­யா­கப் படிக்கமாட்­டேன். மருத்­து­வர், பொறி­யா­ளர் ஆக வேண்­டு­மென்­றால் படித்து நல்ல மதிப்­பெண்­கள் எடுக்கவேண்­டும். அது சாத்தி­ய­மில்லை என்­ப­தால், அம்­மாவை ஏமாற்­று­வ­தற்­காக திரை யுல­கில் சாதிக்­கப்­போ­கி­றேன் என்று சொன்­னேன்.

"சில அனு­ப­வங்­க­ளுக்­குப் பின்­னர் மன­தில் நம்­பிக்கை துளிர்த்­தது. எல்­லோ­ரி­ட­மும் நம்­பிக்­கை­யு­டனே பேசத் தொடங்­கி­னேன். ஆனால், எனக்கு முறை­யான நடிப்பு, இசை என எதுவுமே தெரி­யாது. நம்­பிக்­கை­யு­டன் பேசிப்­பேசி இப்­போது உங்­கள் மத்­தி­யில் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன்," என்­றார் விஜய் ஆண்­டனி.

தன்­னைப் பொறுத்­த­வரை ஒரு படம் வெற்றி­பெற்­றால் அதற்­கான பாராட்டு இயக்­கு­ந­ருக்­குத்­தான் போய்ச்­சேர வேண்­டும் என்று குறிப்­பிட்ட அவர், ஒரு படத்­தின் நாய­கன் என்­றால் அது இயக்­கு­நர்­தான் என்­றார். சினி­மா­வுக்கு கதை எழு­து­வது ஒரு கரு­வைச் சுமப்­ப­தற்கு இணை­யா­னது என்­றும் 'பிச்­சைக்­கா­ரன்' கதையை தம்­மி­டம் விவ­ரித்­த­போது இயக்­கு­நர் சசி வாய்­விட்டு அழு­த­தா­க­வும் ஆண்­டனி கூறி­னார்.

"கதை­யைச் சொல்­லும்­போதே அழு­தார் என்­றால், அதை எழு­தி­ய­போது எவ்­வ­ளவு முறை அழு­தி­ருப்­பார் என்று யோசித்­துப் பார்த்­தேன். இந்­தப் படத்­தின் இயக்­கு­நர் ஆனந்த கிருஷ்­ணன் மிகுந்த திற­மை­சாலி. அஜித், விஜய் என முன்­னணி நடி­கர்­களை வைத்து படம் இயக்­கும் தகுதி அவ­ருக்குண்டு," என்­றார் விஜய் ஆண்­டனி.

'கோடி­யில் ஒரு­வன்' படம் வெளி­யாகி உள்­ளது. விமர்­சன, வசூல் ரீதி­யில் கிடைத்­துள்ள வர­வேற்பு படக்­கு­ழு­வி­ன­ருக்கு உற்­சா­கம் அளித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட தயா­ரிப்­பா­ளர் தனஞ்­செ­யன், புதுப் படங்­களை எப்­ப­டி­யா­வது ஒழிக்கவேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் சிலர் கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­வதாகக் கூறி­யுள்­ளார்.

ஒரு படத்­தி­லுள்ள நல்ல அம்­சங்­களை கவ­னத்­தில் கொள்­ளா­மல் சிலர் சகட்­டு­மே­னிக்கு குறை­களை அடுக்­கு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"இந்­தச் சந்­திப்­புக்கு வந்­துள்ள ஊடக நண்­பர்­கள் யாருமே அப்­ப­டிச் செய்­வ­தில்லை. என்­னி­ட­மும் ஒரு யுடி­யூப் ஒளிவழி இருக்­கிறது என்று நினைத்து, ஒரு படத்தை சகட்­டு­மே­னிக்கு குறை சொல்­கி­றார்­கள். இவர்­கள் எல்­லாம் தமிழ் சினி­மா­வின் சாபக்­கேடு," என்­றார் தனஞ்­செ­யன்.

மக்­கள் மீண்­டும் திரை­ய­ரங்­கு­க்கு வந்து படங்­க­ளைப் பார்க்கவேண்­டும் என்று ஆசைப்படும்போது, இல்­லாத குறை­களைச் சொல்லி சிலர் தமிழ் சினி­மா­வைக் கெடுத்­துக் கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், திரை­யு­ல­கம் நன்­றாக இருந்­தால் மட்­டுமே அனை­வ­ரும் நன்­றாக வாழ முடி­யும் என்­றார்.