நடிப்பில் அசத்திய ரெஜினா

3 mins read
cada769e-9470-47f4-8e23-6f667b140422
ரெஜினா -

'சூர்ப்­ப­னகை' படத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கி­றார் ரெஜினா. கார்த்­திக் ராஜு இயக்­கத்­தில் உரு­வா­கும் இந்தப் படம் ரசி­கர்­கள் மத்­தி­யி­லும் பெரும் எதிர்­பார்ப்­பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­தப் படத்­துக்­கும் புரா­ணங்­கள், வர­லா­று­க­ளுக்­கும் இடையே எந்­த­வித தொடர்­பும் இல்­லை­யாம். 'சூர்ப்­ப­னகை' என்ற கதா­பாத்­தி­ரத்­துக்கே உரிய குணநலன்­களை மட்­டுமே கவ­னத்­தில் எடுத்­துக்கொண்­ட­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

"நமக்கு எல்­லாம் நன்கு அறி­மு­க­மான கதா­பாத்­தி­ரம்­தான் 'சூர்ப்­ப­னகை'. இந்­தப் பெய­ருக்கு உள்ளே ஒரு வில்லி, கதா­நா­யகி என இரு­வ­ரும் உள்­ள­னர். தனக்கு சரி­யெ­னப் பட்­டதை மட்­டுமே அவர் செய்­தி­ருக்­கி­றார்.

"இப்டத்­தின் நாய­கி­யும் அப்­ப­டிப்­பட்­ட­வர்­தான். அத­னால்­தான் இந்­தத் தலைப்பு பொருத்­த­மாக இருக்­கும் என நினைத்­தோம்.

"சூர்ப்­ப­ன­கை­யின் மன­துக்­குள் அழ­கான காதல் இருந்­தது. அதற்­காக அவர் எந்த எல்­லைக்­கும் செல்ல தயா­ராக இருந்­தார். மனம் நிறைந்த துணிச்சலுடன் செயல்­பட்­டார். அதை இந்­தப் படத்­துக்­கான அடித்­த­ள­மா­கப் பயன்படுத்­திக்கொண்­டோம்," என்­கிறார் கார்த்­திக் ராஜு.

ரெஜி­னா­வை மிகத் திறமை­யான நடிகை என்று பாராட்­டு­ப­வர், முழுக் கதை­யை­யும் அங்­கு­லம் அங்­கு­ல­மா­கக் கேட்டு ரசித்த ரெஜி­னா­வின் ஈடு­பாடு தம்மை வெகு­வா­கக் கவர்ந்­த­தா­கச் சொல்­கி­றார்.

இந்­தக் கதையை எழு­தும்­போது ரெஜி­னாவை மன­தில் வைத்­துக்­கொண்­டு­தான் எழு­தி­னா­ராம்.

"ரெஜினா எப்­போ­துமே நிறைய கேள்­வி­கள் கேட்­பார். எதற்­காக இந்த வச­னம், ஏன் இந்­தத் தொனி­யில் பேச வேண்­டும், இந்­தக் காட்சி­யின் நோக்­கம் என்ன என்று பல­வி­த­மான சந்­தே­கங்­களை எழுப்­பு­வார். நாம் சொல்­லும் பதில் ஏற்­றுக்­கொள்­ளும்­ப­டி­யாக இருந்­தால்­தான் அந்­தக் காட்­சிக்­குத் தயா­ரா­வார்.

"ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் உரு­வா­கும் படம் இது. அத­னால் ஒவ்­வொரு வச­னத்­தை­யும் இரு­முறை, வெவ்­வேறு மொழி­களில் பேச வேண்­டும்.

"ரெஜி­னா­வின் திறமை இவ்விஷ­யத்­தில் வெகு­வா­கக் கைகொடுத்­தது. அனைத்து வச­னங்­க­ளை­யும் அவற்­றின் முக்­கி­யத்­து­வம் கெடாத வகை­யில் உட­னுக்­கு­டன் பேசி அசத்­தி­னார். இரு மொழி­களில் உட­னுக்­கு­டன் வச­னம் பேசி நடிப்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல," என்று ரெஜினா புரா­ணம் பாடு­கி­றார் இயக்­கு­நர் கார்த்­திக் ராஜு.

'சூர்ப்­ப­ன­கை'­யில் கணி­னித் தொழில்­நுட்­பம் அதிக அள­வில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 'கிரா­ஃபிக்ஸ்' காட்­சி­கள் படம் பார்க்­கும் ரசி­கர்­களை நிச்­ச­யம் கவ­ரும் என்­கி­றார்.

ரெஜி­னா­வு­டன் அக்­‌ஷரா கவுடா, மன்­சூர் அலி­கான், கிஷோர் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ருக்­குமே இரட்டை வேடங்­க­ளாம். ஏன் இப்­படி என்­ப­தற்கு படம் பார்க்­கும்­போது உரிய விளக்­கம் கிடைக்­கும் என்­கி­றார்.

'சூர்ப்­ப­னகை'யில் சண்­டைக் காட்­சி­க­ளுக்­கும் பஞ்­ச­மி­ருக்­கா­தாம். சண்­டைப் பயிற்­சி­யா­ளர் சூப்­பர் சுப்­ப­ரா­யன் அக்­காட்­சி­களை அமைத்­துள்­ளார்.

"இயக்­கு­நர் கார்த்­திக் ராஜு என்­னி­டம் விவ­ரித்த கதையை அப்­ப­டியே காட்­சிப்­ப­டுத்தி உள்­ளார். தேவை­யற்ற காட்­சி­கள் எது­வுமே இருக்­காது. இது சவா­லான கதைக்­க­ளம். எனது கதா­பாத்­தி­ர­மும் நேர்த்­தி­யாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் சூர்ப்­ப­னகை என் திரைப் பய­ணத்­தில் குறிப்­பி­டத்­தக்க படைப்­பாக இருக்­கும்," என்­கி­றார் ரெஜினா.

'சூர்ப்­ப­னகை' மிக விரை­வில் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இடை­யில் ஓடி­டி­யில் வெளி­யா­கும் என்ற தக­வல் வந்­தது என்­றா­லும், இப்­போது திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­ட­தால் படத்­தின் தயா­ரிப்­புத் தரப்பு மனம் மாறி­விட்­ட­தாம்.

"என்­ன­தான் புதுத் தொழில்­நுட்­பங்­கள் வந்­தா­லும், வீட்­டில் இருந்­த­ப­டியே புதுப் படங்­க­ளைப் பார்த்து ரசிக்­க­லாம் என்­றா­லும், திரை­ய­ரங்­கு­களில் ரசி­கர்­க­ளு­டன் ஒன்­றாக அமர்ந்து படம் பார்க்­கும் அனு­ப­வத்­துக்கு ஈடாக எது­வுமே இல்லை," என்­கி­றார் கார்த்­திக் ராஜு.