தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையராஜா: அனைத்து மேடையிலும் உள்ளார் எஸ்பிபி

2 mins read
207a4c0e-ec4b-4b7f-8161-c51df5b40751
-

காலஞ்­சென்ற பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யம் எளி­மை­யா­கப் பேசிப்­ப­ழ­கக் கூடி­யர் என்று இசை­ய­மைப்­பா­ளர் இளை­ய­ராஜா கூறி­யுள்­ளார்.

திரைப்­பட இசைக்­க­லை­ஞர்­கள் சங்­கம் சார்­பில் எஸ்.பி.பி. முத­லாம் ஆண்டு நினை­வஞ்­ச­லிக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர்,

தாம் இருக்­கும் ஒவ்­வொரு மேடை­யி­லும் எஸ்.பி.பாலா­வும் இருக்­கி­றார் என்­ப­து­தான் சத்­தி­யம் என்­றார்.

"பாலு­வுக்­கும் எனக்­கு­மான நட்பு எந்த மாதி­ரி­யா­னது என்­பது உல­கத்­துக்கே தெரிந்த விஷ­யம். அந்­தக் காலத்­தி­லேயே மேடை­யில் ஆர்­மோ­னி­யத்­து­டன் நான் அமர்ந்­தேன் என்­றால் பக்­கத்­தில் அமர்ந்து பாலு பாடு­வார். எங்­க­ளைச் சுற்றி மற்ற அனை­வ­ரும் இருப்­பார்­கள்.

"இசை­ய­மைப்­பா­ள­ராக ஆன பின்­பும்­கூட எங்­க­ளு­டைய நட்பு தொடர்ந்­தது. இரு­வ­ரு­டைய உழைப்­பி­னால்­தான் பல பாடல்­கள் உங்­களை வந்து சேர்ந்­துள்­ளன. தொழில் வேறு, நட்பு வேறு என்­ப­தில் தெளி­வாக இருந்­தோம்.

"பல மேடை­களில் என்­னைப் பற்றி நிறைய புகழ்ந்து பேசி­யி­ருக்­கி­றார். அவர் புகழ்ந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவ­தில்லை. நான் அவ­ரைப் பற்­றிப் புகழ்ந்து, அவ­ருக்கு ஒன்­றும் ஆகப்போவ­தில்லை. ஆனால், அவர் மனத்­தில் எனக்கு என்ன இடம் கொடுத்­தி­ருக்­கி­றார் என்­பது முக்­கி­யம்.

"பாலு உடல்­நிலை மிக­வும் மோச­ம­டைந்­த­தாக தெரிய வந்­த­தும், ஒரு காணொ­ளியை வெளி­யிட்­டேன்.

"அதில், 'பாலு... உனக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றேன் சீக்­கி­ரம் வா' என்று அதில் குறிப்­பிட்­டி­ருந்­தேன். அந்த காணொ­ளியைப் பார்த்­த­வுடன், உடனே கண்­க­லங்கி, கைபேசி­யில் தெரிந்த எனக்கு முத்­தம் கொடுத்­தி­ருக்­கி­றார்.

"யாரை­யா­வது பார்க்க வேண்­டுமா என்று எஸ்.பி.பி.யி­டம் கேட்டி­ருக்­கி­றார்­கள். அப்­போது 'ராஜாவை வரச் சொல்­லுங்க' என்­றா­ராம். அவர் மன­தில் எத்­த­கைய இடத்­தைக் கொடுத்­தி­ருந்­தார் என்­பதை தெரிந்துகொள்ள இந்த ஒரு வார்த்தை போதாதா?" என்­றார் இளை­ய­ராஜா.