மாறன்: புது முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பவே செய்யும்

மாறன்: புது முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பவே செய்யும்

2 mins read
b5542337-8f9b-48cc-91d5-7d27c55a4014
'ப்ளூ சட்டை' மாறனுடன் (இடது), தயாரிப்பாளர் ஆதம் பாபா. -

திரைப்­பட விமர்­ச­க­ரான 'ப்ளூ சட்டை' மாறன் இயக்­கி­யுள்ள 'ஆன்டி இண்­டி­யன்' படம் விரை­வில் திரை­காண உள்­ளது.

இணை­யத்­தில் மாறன் வெளி­யிட்ட விமர்­ச­னங்­க­ளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பிய அதே வேளையில் ஆத­ர­வுக் குரல்­களும் எழுந்­தன.

இந்­நி­லை­யில், அவர் இயக்­கி­யுள்ள படத்தை விமர்­சிக்க ஏரா­ள­மா­னோர் காத்­தி­ருக்­கின்­ற­னர். மிக­வும் போரா­டித்­தான் படத்­துக்­கான தணிக்­கைச் சான்­றி­த­ழைப் பெற்­றுள்­ளார். இதை­ய­டுத்து செய்­தி­யாளர்­களைச் சந்­தித்­தார் மாறன். படத்­தின் தயா­ரிப்­பா­ளர் ஆதம் பாபா­வும் உட­னி­ருந்­தார்.

பெரிய பிரச்­சி­னை­கள் வரும் எனத் தெரிந்தே இந்­தப் படத்தை தயா­ரிக்க முன்­வந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"பொது­வாக ஒவ்­வொரு திரைப்­படத்­துக்­கும் ஏதே­னும் ஓர் அடிப்­படை­யில் தணிக்­கைச் சான்­றி­தழ் வழங்­கப்­படும். ஆனால் 'ஆன்டி இண்­டி­யன்' படத்­துக்கு எப்­ப­டிச் சான்­றி­தழ் கொடுப்­பது என்­பது தணிக்­கைக் குழு­வுக்கே புரி­ய­வில்லை. கார­ணம், அந்த அளவுக்கு மாறு­பட்ட ஒரு படத்தை உரு­வாக்கி உள்­ளார் மாறன்.

"எனி­னும் படத்­தைப் பாராட்டத் தவ­ற­வில்லை. இதுவே எங்­க­ளுக்­குக் கிடைத்த முதல் வெற்றி," என்­றார் தயா­ரிப்­பா­ளர் ஆதம் பாபா.

அடுத்து பேசிய மாறன், தன் படம் வெளி­யா­கக்­கூ­டாது என்று சிலர் பல்­வேறு வித­மான அழுத்­தங்­க­ளைக் கொடுத்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

படத்­தில் இடம்­பெற்­றுள்ள 38 முக்­கிய காட்­சி­களை நீக்கவேண்­டும் என்று தணிக்­கைக் குழு­வி­னர் கூறி­விட்­ட­ன­ராம். ஆனால் அவற்றை நீக்­கி­னால் படம் நிச்­ச­யம் தோல்வி அடை­யும் என்­ப­தால் மாற­னும் தயா­ரிப்­பா­ள­ரும் மறுத்­து­விட்­ட­னர்.

சான்­றி­தழை சென்னை, பெங்­களூ­ரு­வைச் சேர்ந்த தணிக்­கைக் குழு­வி­னர் வழங்க மறுத்த நிலை­யில், நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ள­னர். மனுவை விசா­ரித்த நீதி­மன்­றம், தணிக்­கைக் குழுக்­கள் எடுத்த முடி­வு­களை ரத்து செய்ய உத்­த­ர­விட்­டது. மேலும் புதிய குழு­வை­யும் அமைத்­தது.

"அக்­கு­ழு­வி­னர் படம் பார்த்து மூன்று இடங்­களில் மட்­டுமே கத்திரி போட்­டது. இத­னால் 'யு/ஏ' சான்­றி­த­ழு­து­டன் படம் வெளி­யாகிறது. தணிக்­கையே வேண்­டாம் என்று சொல்­ல­வில்லை. எனி­னும் காலத்­துக்கு ஏற்ப விதி­மு­றை­களில் சில மாற்­றங்­க­ளைக் கொண்டு வர வேண்­டும்," என்­கி­றார் மாறன்.

இவ­ரது 'ஆன்டி இண்­டி­யன்' எதைப் பற்­றிப் பேசப்­போ­கிறது?

"நாடே கெட்­டா­லும் பர­வா­யில்லை, நான் மட்­டும் நன்­றாக இருக்­க­வேண்­டும் என நினைக்­கும் சில சுய­நல மனி­தர்­களைக் குறிக்­கும் வகை­யில் தான் இப்­ப­டி­யோர் தலைப்பை வைத்­துள்­ளோம். ஒரு­வேளை இந்த தலைப்பு மறுக்­கப்­பட்­டால், 'கேணப்­பை­யன் ஊருல கிறுக்­குப்­பை­யன் நாட்­டாமை' என தலைப்பு வைக்­க­லாம் என்­றும் முடிவு செய்­தி­ருந்­தோம்.

"இந்­தப்­ப­டம் எடுப்­ப­தற்­காக எனக்கு மிரட்­டல் எது­வும் வர­வில்லை. ஆனால் எனது படம் வெளி­வ­ரக்­கூ­டாது என்று திரை­யு­ல­கில் இருந்தே பல­வாக அழுத்­தம் கொடுக்­கப்­பட்­டது. எங்­கள் படத்­திற்கு சான்­றி­தழ் மறுக்­கப்­பட்­டது என்­கிற செய்­தி­யையே மகிழ்ச்சி­யு­டன் கொண்­டா­டிய தயா­ரிப்­பா­ளர்­கள் பலர் உண்டு.

"சினி­மா­வில் புதி­தாக ஒரு விஷ­யம் வரும்­போது எதிர்ப்­பு­கள் கிளம்­பத்­தான் செய்­யும். இந்த 'ஆன்டி இந்­தி­யன்' படத்தை பார்க்­கும்­போது, அத்­த­கைய எண்­ணம் ஏற்­படும். ஆனால் படத்­தின் முடி­வில் நீங்­கள் அப்­படி நினைக்க மாட்­டீர்­கள்," என்­கி­றார் விமர்­ச­க­ரும் இயக்­குநரு­மான மாறன்.