'அண்ணாத்தே' பாடலில் எஸ்.பி.பி. குரல் கேட்டு கலங்கிய ரஜினி

'அண்ணாத்தே' பாடலில் எஸ்.பி.பி. குரல் கேட்டு கலங்கிய ரஜினி

1 mins read
801a4df3-a59e-4f4f-8b0f-75992a661c07
-

இயக்­கு­நர் சிவா இயக்­கத்­தில், ரஜி­னி­காந்த் நடித்­துள்ள 'அண்­ணாத்தே' படம் தீபா­வ­ளி­யன்று வெளி­யா­க­வுள்­ளது. 'சன் பிக்­சர்ஸ்' தயா­ரிப்­பில் இமான் இசை­ய­மைத்­துள்ள இந்தப் படத்­தின் முதல் பாடல் திங்­கட்­கி­ழமை மாலை 6 மணிக்கு வெளி­யா­னது.

இந்­தப் பாடலை மறைந்த பின்­ன­ணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யம் பாடி­யுள்­ளார். ரஜி­னி­க்காக­அவர் பாடிய பாடல்­கள் அனைத்­தும் ரசி­கர்­க­ளி­டம் மிகுந்த வர­வேற்பை பெற்றுள்ளன.

இந்­தப் பாடல் வெளி­யா­ன­தும் அது­கு­றித்து பேசிய ரஜினி, "45 ஆண்­டு­கள் என் குர­லாக வாழ்ந்த

எஸ்.பி.பி. அவர்­கள் 'அண்­ணாத்தே' படத்­தில் எனக்­கா­கப் பாடிய பாட­லின் படப்­பி­டிப்­பின்­போது, இது­தான் அவர் எனக்­குப் பாடும் கடை­சிப் பாட­லாக இருக்­கும் என்று நான் கன­வில்கூட நினைக்­க­வில்லை. என் அன்பு எஸ்.பி.பி. தன் இனிய குர­லின் வழி­யாக என்­றும் நம்முடன் வாழ்ந்துகொண்டே இருப்­பார்,'' என்று உருக்­க­மா­கப் பேசி­யுள்­ளார்.

குடும்­பங்­கள் கொண்­டா­டும் பொழுது­போக்கு பட­மாக இந்­தப் படத்தை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.