நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் "நான் உலகை மாற்றவேண்டும் என்று விரும்பினால் முதலில் என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டும். இனிமேல் என் படுக்கையை நான் உருவாக்கவேண்டும். அலமாரியைத் தூசு தட்ட வேண்டும். மதியம் வரை படுக்கையில் படுக்கக்
கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். நான் என்ன செய்ய விரும்பு
கிறேன் என்ற விஷயங்
களைப் பற்றி கனவு காண்கிறேன். நான் கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்தேன். தொடர்ந்து உழைப்பேன். எனக்கு யார் பணமும் வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாக சைதன்யா, சமந்தா இருவரும் வாழ்ந்து வந்த ஹைதராபாத் வீட்டை சமந்தா சொந்தமாக வாங்கிஅந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். இனிமேல் திரையில் அதிக கவனம்
செலுத்தப் போவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா, விக்னேஷ் சிவனின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.