நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் நடிகை ரேவதி. இதுவரை மூன்று படங்களை அவர்் இயக்கியுள்ளார்.
2009இல் மலையாளத்தில் வெளியான 'கேரளா கஃபே' என்ற படத்தை பத்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இயக்கி இருந்தார் ரேவதி.
அதற்கு முன்பு தனியாக இரு படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் தயாராகும் 'தி லாஸ்ட் ஹவர்' என்ற படத்தை இயக்க உள்ளார் ரேவதி.
இத்தகவலை அப்படத்தின் கதாநாயகியான கஜோல் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

