சமந்தாவுக்கு ஆறுதல் கூறிய ரகுல், மஞ்சிமா

சமந்தாவுக்கு ஆறுதல் கூறிய ரகுல், மஞ்சிமா

1 mins read

சமந்தா விவாகரத்து செய்யப்போவதாக வெளியான செய்தியால் அவரது சக நடிகைகள் வருத்தம் அடைந்துள்ளனர். சிலர் அவருக்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து என்பது மிகவும் வேதனை தரும் விஷயம் என்று அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் சமந்தா.

அந்தப் பதிவை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள ரகுல் பிரீத் சிங், "நீங்கள் மன உறுதியோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது," எனத் தெரிவித்துள்ளார். மஞ்சிமா மோகன் தமது டுவிட்டரில், "உறுதியோடு இருங்கள் சமந்தா," எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தாம் நடிக்கும் புதுப்பட அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் சமந்தா.