தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைவிட்டு பிரிந்ததைத் தொடர்ந்து நடிகை சமந்தா முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.
தெலுங்கில் நடைபெறும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் நட்சத்திரப் போட்டியாளராக அவர் பங்கெடுக்கிறார். நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்நிகழ்ச்சியை ஏற்று நடத்துகிறார்.
நாளை வியாழக்கிழமை ஜெமினி டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதை முன்னிட்டு, ஜெமினி டிவியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட முன்னோட்டக் காட்சி ஒன்றில், சமந்தாவை ஜூனியர் என்டிஆர் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறார்.
தொடக்கத்தில் சம்பந்தா சற்று பயத்துடன் காணப்பட்டாலும் பின்னர் ‘ஹாட் சீட்’ இருக்கையில் அமர்ந்ததும் அவரது முகத்தில் புன்னகை மலர்ந்தது.