சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும்
'அரண்மனை 3' திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை உதயநிதி
ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறுவனம் வெளியிட்டது.
இந்தப் படம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய
நாயகன் ஆர்யா, "படப்பிடிப்பு காலை 7 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். இரண்டு மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடக்கும். அனைத்து நடிகர்களும் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்களிடத்தில் நகைச்சுவையாகப் பேசி வேலை செய்வதே தெரியாமல் வேலை வாங்கிவிடுவார் இயக்குநர் சுந்தர்.சி.
"காலை 7 மணிக்குத் தொடங்கிய படப்பிடிப்பு இரவு 10 மணிக்கு மேல் நடந்தாலும் வேலை செய்தது போலவே இருக்காது. அந்த அளவுக்கு அவர் எங்களை நகைச்சுவையாகப் பேசி வேலையில் ஈடுபட வைக்கும் திறமை கொண்டவர்.
"நடிகர் விவேக்குடன் நீண்ட நாட்களாக நடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. அவர் ஒரு மாமேதை. அவருடன் நடிக்க வைத்த சுந்தர்.சிக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் இழப்பு என்னை மிகவும்
பாதித்துவிட்டது. அவருடைய இறுதிப் படமாக
'அரண்மனை 3' படம் அமையும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
"அத்துடன் நான் நடித்த 'பாஸ் என்ற பாஸ்கரன்',
'மதராசபட்டினம்' படங்களை அடுத்து 'அரண்மனை 3' படத்தையும் உதயநிதி வெளியிடுகிறார். அதற்கு
அவருக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
"தற்பொழுது பார்வையாளர்கள் திரையரங்கு
களுக்குச் சென்று படம் பார்க்கத் தொடங்கி
இருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அண்மையில் வெளியான 'டாக்டர்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுபோல் 'அரண்மனை 3' படத்தையும் திரையரங்குகளில் பார்க்க பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்," என்று கூறியுள்ளார்.
படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், "எல்லோரும் 'அரண்மனை' படங்களை எளிதாக எடுத்துவிடுகிறீர்கள் என்று சொல்வார்கள். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்பும் வகையில் கொடுப்பது மிகவும்
கஷ்டம்.
"ஏற்கெனவே உள்ள விஷயங்களைவிட கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கவேண்டும். 'அரண்மனை' படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியையும்
தந்தது. ஆனால், உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.
"மற்ற நடிகர்களைப்போல் இல்லாமல் நடித்ததும் நம் வேலை முடிந்துவிட்டது என்று போகாமல் தொழில்
ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் படத்தின் நாயகன் ஆர்யா.
"அரண்மனை' படம் என்றாலே நடிகைகளுக்கு
முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும்
ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்
கிறார்கள்.
'அரண்மனை 1'ம் பாகத்தை உதயநிதி வெளியிட்டார்.
தற்போது 'அரண்மனை 3' திரைப்படத்தையும் பிரம்மாண்டமான முறையில் அவரே வெளியிடுகிறார். இந்தப் படத்தைப் பார்த்த ஒரே ஆள் உதயநிதி மட்டும்தான். 'அரண்மனை 1' படத்தைப் பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது 'அரண்மனை 3' படத்தைப் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.
"படத்தைப் பார்க்கின்ற சிறுவர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்," என்றார் அவர்.