'உண்மையை உரக்கச் சொல்லவேண்டும்'

'உண்மையை உரக்கச் சொல்லவேண்டும்'

2 mins read
0c6e6eae-a00a-444d-8818-aab2c03d1022
-

நடி­கர் சூர்­யா­வின் 39வது படம் 'ஜெய் பீம்'. இந்­தப் படத்­தின் முன்­னோட்­டக் காட்சி ஆயுத பூஜை­யன்று வெளி­யாகி பல­ரா­லும் பார்க்­கப்­பட்டு, பகி­ரப்­பட்டு

வரு­கிறது.

'ஜெய் பீம்' படத்தை 'கூட்­டத்­தில் ஒரு­வன்' பட இயக்­கு­நர் டி.ஜே.ஞான­வேல் இயக்கியுள்ளார். இந்­தப் படத்­தில் சூர்யா ஜோடி­யாக ரஜிஷா விஜ­யன் நடித்­துள்­ளார். பிர­காஷ் ராஜ் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க, இந்­தப் படத்­திற்கு ஷான் ரோல்­டன் இசை­ய­மைக்க, சூர்­யா­வின் '2டி என்­டர்­டெ­யின்­மென்ட்' நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது.

'ஜெய் பீம்' படத்­தில் இரு­ளர், பழங்­கு­டி­யி­ன­ருக்­காகப் போரா­டும் வழக்­க­றி­ஞர் வேடத்­தில் சூர்யா நடித்­துள்­ளார்.

உண்­மைச் சம்­ப­வத்தை அடிப்­

ப­டை­யாகக்கொண்டு உரு­வா­கி­யுள்ள இந்­தப் படத்­தில் சூர்­யா­வின் கதா­பாத்­தி­ரம் கெள­ரவ வேட­மாக இல்­லா­மல் படம் முழு­வ­தும் வரு­வதுபோல் உருவாக்கப் ­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தப் படம் தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம் ஆகிய 4 மொழி­களில் தீபா­வ­ளியை ஒட்டி வரு­கின்ற நவம்­பர் 2ஆம் தேதி 'அமே­சான் ப்ரைம் ஓடிடி' தளத்­தில் நேர­டி­யாக வெளி­யாக

உள்­ளது.

முன்­னோட்­டக் காட்­சி­யில் "இந்த சாதி­யில் திருட்டு வழக்­கில் கைது செய்­யப்­ப­டு­வது

சக­ஜம் சார் என்று ஒரு­வர் சொல்ல, அதற்கு பதி­ல­ளிக்­கும் சூர்யா, திரு­டன்­கள் இல்­லாத சாதி இருக்கா நட­ராஜ்? உங்­கள் சாதி என் சாதி என எல்லா சாதி­யி­லும் பெரிய பெரிய திரு­டர்­கள் இருக்­கி­றார்­கள்," என்று பேசும் வச­னம் ரசி­கர்­க­ளி­டையே கவ­னம் பெற்று, இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

இந்த முன்­னோட்­டக் காட்­சியை தன்­னு­டைய டுவிட்­டர்

பக்­கத்­தில் வெளி­யிட்டு, "உண்­மையை உரக்­கச் சொன்­னால் மட்­டுமே உண்­மை­யான மாற்­றம் நிக­ழும். மகிழ்­விப்­ப­தைக் காட்­டி­லும், உணர்­வு­பூர்­வ­மாய் உண்­மை­யின் பக்­கம் நின்ற மன­நி­றை­வைத் தரும் 'ஜெய் பீம்!" என்று

பதி­விட்­டுள்­ளார்.

மேலும் ஐபி­எல் இறு­திப் போட்­டி­யின்போது 'ஜெய் பீம்' படத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் நிகழ்ச்­சி­யில் சூர்யா கலந்துகொண்­டார். அப்­போது சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யின் கேப்­டன் தோனி பற்றி சில சுவா­ரஸ்­ய­மான தக­வல்­களைத் தெரி­வித்­துள்­ளார்.

அதில், ரசி­கர்­க­ளு­டைய அன்பை எப்­படி திருப்பி கொடுப்­பது என்று நான் தவித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். ஆனால், தோனி எப்­போ­துமே அதைத் தவற விட்­ட­தில்லை. அழுதுகொண்­டி­ருந்த சிறு­மியை ஆட்­டத்­தில் வெற்றி பெற்­ற­தும் மட்டையில் கையெ­ழுத்­திட்டு அந்த சிறு­மிக்கு தோனி கொடுத்து உடனே அந்த சிறு­மியை சிரிக்க வைத்­தி­ருக்­கி­றார். அந்த சிறு­மி­யின் வாழ்க்­கை­யில் அந்த தரு­ணத்தை என்­றும் மறக்க முடி­யாத வகை­யில் தோனி மாற்­றி­யுள்­ளார்.

"அது­போல் என் மனைவி ஜோதிகா ஒரு­முறை குழந்­தை­

க­ளு­டன் தோனியைப் பார்க்க வேண்­டும் என்று கேட்­ட­போது அவ­ரும் எங்­க­ளுக்­கான நேரத்தை ஒதுக்­கி­னார்.

"24' படத்­தில் அவ­ரு­டன் ஃசெல்பி எடுக்க கேட்­டேன். தோனி அனு­மதி கொடுத்­தார். தோனி­யி­ட­மி­ருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்­தி­ருக்­கிறது," என்று சூர்யா கூறினார்.அந்தக் காணொளி தற்­போது இணை­யத்­தில் பரவி வருகிறது.