'கதை கேட்டு பயந்தேன்'

'கதை கேட்டு பயந்தேன்'

3 mins read

நடன இயக்­கு­நர் சாண்டி கதா­நா­ய­க­னாக நடிக்­கும் படம் '3.33'. சந்­துரு இயக்­கும் இப்­ப­டத்­தில் நாய­கி­யாக அறி­மு­க­மா­கி­றார் ஸ்ருதி செல்­வம்.

சின்­னத்­திரை ரசி­கர்­க­ளுக்கு இவரை நன்கு தெரிந்­தி­ருக்­கும். சில தொலைக்­காட்­சித் தொடர்­களில் நடித்­துள்­ளார். இன்ஸ்­ட­கி­ரா­மில் இவரை ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பின்­தொ­டர்­கின்­ற­னர்.

ஸ்ரு­தி­யின் சொந்த ஊர் சேலம். சென்­னை­யில் பிறந்­த­வர் என்­றா­லும், தந்­தை­யின் பணி நிமித்­தம் கல்­லூ­ரிப் படிப்பை முடிக்­கும் வரை வடஇந்­தி­யா­வில்­தான் இருந்­தா­ராம்.

"அப்பா இந்­திய விமா­னப்­படை அதி­காரி. குஜ­ராத், டெல்லி, மகா­ராஷ்­டிரா என பல மாநி­லங்­களில் பணி­யாற்றி உள்­ளார். தொடர்ந்து வடஇந்­தி­யா­வில் வசித்து வந்­த­தால் இந்தி மொழி நன்­றா­கப் பேசு­வேன்.

"தாய்­மொ­ழியை மறந்­து­வி­டக் கூடாது என்று சொன்ன என் தந்தை, கோவைக்கு அனுப்பி வைத்து அங்­குள்ள கல்­லூ­ரி­யில் பொறி­யி­யல் கல்வி படிக்க வைத்­தார். அங்­கி­ருந்த நான்கு ஆண்­டு­களில் ஆசை தீர தமி­ழில் பேசி­னேன்.

"நிறைய நண்­பர்­கள் கிடைத்­த­னர். அப்­போ­து­தான் சக மாண­வர் ஒரு­வர் தனது குறும்­ப­டம் ஒன்­றில் என்னை நடிக்க வைத்­தார். அதன் பிறகு பல குறும்­பட வாய்ப்­பு­கள் தேடி வந்­தன," என்று தாம் நடிக்­கத் துவங்­கிய கதையை விவ­ரிக்­கி­றார் ஸ்‌ருதி.

'மைபோட்ட கண்­ணாலா' என்ற இசைத்­தொ­குப்­பின் காணொ­ளிப்­ப­திவு தான் இவரை ரசி­கர்­க­ளி­டம் கொண்டு சேர்த்­தது. கடந்த 2017ல் வெளி­யான அத்­தொ­குப்பை 12 மில்­லி­யன் பேர் இணை­யத்­தில் பார்த்­துள்­ள­னர்.

படிப்பை முடித்­த­தும் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் வேலை பார்த்­துள்­ளார். நல்ல ஊதி­யம் கிடைத்­த­போ­தும், உடன் பணி­யாற்­றி­ய­வர்­கள் 'ஏன் சினி­மா­வில் நடிக்­க­வில்லை' என்று கேட்­டுள்­ள­னர்.

"நமக்கு அதிர்ஷ்­டம் இருக்­கி­றதா என்­பதை சோதித்­துப் பார்த்­து­வி­டு­வோம் என்று முடிவு செய்­தேன். என்­னு­டைய புகைப்­ப­டங்­களை இன்ஸ்­ட­கி­ரா­மில் பகிர்ந்­த­போது நல்ல வரவேற்பு கிடைத்­தது. அப்­போ­து­தான் தனி­யார் தொலைக்­காட்­சி­யில் இருந்து அழைப்பு வந்­தது. நிகழ்ச்சி தொகுப்­பா­ள­ரா­கப் பணி­யாற்ற அழைத்­த­னர். ஆனால் எனக்கு அதில் விருப்­ப­மில்லை. தொலைக்­காட்­சித் தொட­ரில் நடிக்க விரும்­பு­வதாகக் கூறி­ய­தால் அதற்­கான வாய்ப்பு கிடைத்தது," என்கிறார் ஸ்‌ருதி.

சில தொடர்­களில் நடித்து முடித்த நிலை­யில், கொரோனா ஊர­டங்கு இவ­ரை­யும் முடக்­கிப் போட்­டி­ருக்­கிறது. எனி­னும், நேரத்தை வீண­டிக்­கா­மல் அண்­மைய புகைப்­ப­டங்­கள் சில­வற்றை தொடர்ந்து இன்ஸ்­ட­கி­ரா­மில் வெளி­யிட்டு வந்­துள்­ளார். அதைப் பார்த்­து­தான் '3:33' படத்­துக்­கான நடிப்­புத் தேர்­வுக்கு அழைப்பு வந்­த­தாம். நேரில் சென்­ற­போது ரசி­கர்­கள் நன்கு அறிந்த ஒரு கதா­நா­யகி உட்­பட ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட இளம்­பெண்­கள் வந்­தி­ருப்­ப­தைக் கண்டு அசந்து­போ­ன­தா­கச் சொல்­கி­றார். எனி­னும், இயல்­பாக நடித்ததால் இவரைத் தேர்வு செய்­த­னராம்.

"இந்­தப் படத்­தில் கௌதம் மேனன் சார் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். பாடல்­கள் ஏதும் இல்­லா­த­தால் சாண்டி மாஸ்­ட­ரு­டன் நட­ன­மா­டும் வாய்ப்பு அமை­ய­வில்லை. அவ­ருக்கு உதவி செய்­யும் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளேன். கைவ­சம் மூன்று படங்­கள் உள்­ளன. எடுத்த எடுப்­பி­லேயே இப்­படி வாய்ப்­பு­கள் தேடி வரு­வது உற்­சா­கம் அளிக்­கிறது," என்­கி­றார் ஸ்‌ருதி.

'3.33' திகில் ­ப­ட­மாக உரு­வா­கி­ற­து. இயக்­கு­நர் கதையை விவ­ரித்தபோதே பயந்து நடுங்­கி­னா­ராம்.

"இது குடும்­பத்­து­டன் அமர்ந்து பார்த்து பயத்தில் அலறி ரசிக்க வேண்­டிய படம். இது ரசிகர்கள் என்­னைப் பற்றி பேச வைக்­கும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் ஸ்‌ருதி.

, :   

ஸ்‌ருதி செல்வம்