திரைத்துறை நடிகர்களில் மிகவும் வித்தியாசமானவர் அஜித். பல விஷயங்களில் தனித்து தெரிவார் இவர். இரு ஆண்டுகளாக நடந்து வந்த 'வலிமை' படப்
பிடிப்பை முடித்துவிட்டு வடமாநிலங்களில் சுற்றுப்
பயணம் செய்து வருகிறார்.
அண்மையில் தாஜ்
மஹால் சென்றிருந்தார். தாஜ்மஹால் முன்பு அவர் எடுத்த படங்கள் இணையத்தில் பரவின. அதனைத் தொடர்ந்து அவர் பல இடங்களுக்குச் சென்ற படங்கள் சமூகவலைத்
தளங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று இந்தியா - பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லைக்கு சென்றார் அஜித். அங்கு ராணுவ வீரர்
களுடன் கலந்துரையாடினார். ராணுவ வீரர்களும் அஜித்துடன் ஃசெல்பி எடுத்து மகிழ்ந்தனர். ராணுவ வீரர்
களுடன் கையில் தேசிய கொடியை அஜித் பிடித்து நிற்கும் படம் வெளியாகி ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.