கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு தங்கையாக 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்தவுடன் தன்னுடைய சம்பளத்தை திடீரென்று உயர்த்தி இருக்கிறார். அதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
ரஜினிகாந்துடன் நடித்தால்போதும்
தங்களின் வாழ்க்கைப் பாதை வேறு ஒரு நிலைக்கு உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் பல நடிகைகள் அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷும்
ரஜினிக்கு ஜோடியாக 'அண்ணாத்த' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ தங்கை வேடம்.
மனதைத் தேற்றிக்கொண்டு வந்த வாய்ப்பை
இழக்காமல் 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து முடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு முக்கிய வேடமாம். இந்தப் படத்திற்கு பிறகு தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கோலிவுட், டோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கப் போகிறார் என்று காத்திருந்த நேரத்தில், இந்திப் படமான 'மைதான்' படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதற்காக உடல் எடையைக் குறைத்து பார்க்கவே பரிதாபமாக எலும்பாக மாறினார் கீர்த்தி
சுரேஷ். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனது. அதனால், அவர் மனம் உடைந்து போனார்.
தமிழில் அவர் நடித்து வெளியான 'பெண்குயின்' படம் படு தோல்வியை சந்தித்தது. தெலுங்கு, தமிழில் வெளியான 'மிஸ் இந்தியா' படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பெரிய படத்தில் மீண்டும் நடித்து பழைய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் தங்கை வேடம் என்றாலும் பரவாயில்லை என்று ஒப்புக்கொண்டு நடித்தார்.
தமிழ் சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த யோகம் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின்
'சர்காரு வாரி பாட்டா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தியைத் தேடி வந்தது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரை
அரங்குகளில் வெளியாகிறது.
மகேஷ் பாபு படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் நானி நடிக்கும் 'தசரா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தில் நடிக்கத்தான் கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளத்தை கேட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதுவரை 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்த கீர்த்தி சுரேஷ் 'தசரா' படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெல்லா இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் இணைந்து 'தளபதி 66' படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷ்தான் என்ற பேச்சு அடிபடுகிறது.
கீர்த்தி சுரேஷ் செய்த சிபாரிசு காரணமாகத்தான் தெலுங்கு இயக்குநரின் படத்தில் நடிக்க விஜய் ஒத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. 'தளபதி 66' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவும் அதிக
வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
என்னதான் தேசிய விருது வென்ற நடிகையாக இருந்தாலும் நாயகர்களுக்கு நிகரான சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட இவர் பெற மாட்டார் என்றே தெரிகிறது.
நாயகர்களின் சம்பளம் ரூ.100 கோடியைத் தாண்டிச் செல்லும் நிலையில், நாயகிகளின் சம்பளம் 2 முதல் 5 கோடியிலேயே இருக்கிறது. நயன்தாரா மட்டுமே ரூ.10 கோடி வாங்குவதாகக் கூறுகிறது கோலிவுட்.