ஆதிக்: சிரிக்க வைப்பார் 'சைக்கோ' பிரபுதேவா

ஆதிக்: சிரிக்க வைப்பார் 'சைக்கோ' பிரபுதேவா

2 mins read
eba69a50-fc11-421f-b130-9464f99c9fcb
அமைரா -

ஆதிக் ரவிச்­சந்­தி­ரன் இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது 'பஹீரா'. பிர­பு­தேவா நாய­க­னாக நடிக்­கி­றார்.

அமைரா தஸ்­தூர் முதன்மை நாய­கி­யாக நடிக்க, ரம்யா நம்­பீ­சன், காயத்ரி, சாக்‌ஷி அகர்­வால், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, யாஷிகா ஆனந்த் என மேலும் பலரைக் கள­மி­றக்கி உள்­ளார் ஆதிக்.

இதில் பிர­பு­தே­வா­வின் தோற்­றம் வித்­தி­யா­ச­மாக இருக்­கு­மாம். அவரை திரை­யில் பார்க்­கும்­போது ரசி­கர்­கள் நிச்­ச­யம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வார்­கள் என்­கி­றார் ஆதிக்.

இந்­தப் படத்­துக்­கான கதையை எழு­தும்­போதே அமைரா தஸ்­தூர் தான் கதா­நா­யகி என்று முடிவு செய்­து­விட்­டா­ராம். அதற்­கான கார­ணங்­களை அடுக்­கு­கிறார்.

"என்­னு­டைய கதைக்கு மிக மென்­மை­யான, எது­வுமே தெரி­யாத அப்­பா­வித் தோற்­றத்­து­டன் உள்ள பெண்­தான் தேவைப்­பட்­டார்.

"அப்­போதே அமைரா தான் இதற்­குப் பொருத்த­மாக இருப்­பார் என்று நினைத்­தேன். 'இந்­தப் பெண் இப்­ப­டி­யும் பேசு­வாரா' என்று ரசி­கர்­கள் திகைத்­துப்போக வேண்­டும் என்­பதே என் விருப்­பம். அந்த திகைப்பை அமை­ரா­வால் ஏற்­ப­டுத்த முடி­யும் என உறு­தி­யாக நம்பு­கி­றேன்.

"அவ­ரும் என் மன­தில் இருப்­ப­தைப் புரிந்துகொண்டு, நான் அவ­ரது கதா­பாத்­தி­ரத்தை எவ்­வாறு உரு­வாக்கி உள்­ளேன் என்­பதை நன்கு உள்­வாங்­கிக் கொண்டு நடித்­துள்­ளார்," என்று பாராட்­டு­கி­றார் ஆதிக்.

அவ­ரைத் தவிர இப்­ப­டத்­தில் உள்ள மற்ற நாய­கி­களுக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் இருக்­கு­மாம். மேலும் நாசர் சார், பாபா பாஸ்­கர், மோகன் வைத்­தியா, கோபி­நாத் ரவி என்று பெரிய பட்­டா­ளமே கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளது.

'பஹீரா' எப்­ப­டிப்­பட்ட படம்?

"பல்­வேறு உலக மொழி­களில் 'சைக்கோ' வகைப் படங்­கள் ஏரா­ள­மாக வெளி­வந்­துள்­ளன. பெரும்­பா­லான படங்­களில் 'சைக்கோ' கதா­பாத்­தி­ரங்­கள் கொடூ­ர­மா­ன­வை­யாக, தீய சக்­தி­யாக, மனித இனத்­துக்கு எதி­ரா­ன­வை­யாக மட்­டுமே சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருக்­கும். 'பஹீரா'வும் ஒரு சைக்கோ தான். ஆனால் இந்­தக் கதா­பாத்­தி­ரம் அனை­வ­ரை­யும் சிரிக்க வைக்­கும். 'பஹீரா'வாக பிர­பு­தேவா நடித்­துள்­ளார்.

"அவரை நல்­ல­வன், கெட்­ட­வன் என்று இரு­வ­கை­யாக பார்க்க முடி­யும். நான் சொன்ன கதை­யைக் கேட்ட உட­னேயே நடிக்க சம்­ம­தித்­து­விட்­டார். அவர் ஒப்­பந்­த­மான பிற­கு­தான் இப்படம் புதிய உய­ரத்­தைத் தொட்­டது. இப்­போது படம் குறித்த எதிர்­பார்ப்பு ரசி­கர்­கள் மத்­தி­யில் கூடியுள்ளது. அனை­வ­ருக்­கும் மன­நிறைவு தரும் வகை­யில் தர­மான பட­மாக உரு­வாகி வரு­கிறது," என்­கி­றார் ஆதிக்.