ஆஸ்கார் போட்டிக்குச் செல்லும் 'கூழாங்கல்'

ஆஸ்கார் போட்டிக்குச் செல்லும் 'கூழாங்கல்'

2 mins read
a02ad458-fe21-473b-b1fe-af7259477155
'கூழாங்கல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

இந்­தியா சார்­பாக ஆஸ்­கர் விருதுப் போட்­டிக்கு 'கூழாங்­கல்' திரைப்­படம் தேர்­வாகி உள்­ளது.

இது தமிழ் சினி­மா­வுக்கு கிடைத்த பெரும் கவு­ர­வம் என திரை­யு­ல­கப் பிர­மு­கர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

விக்­னேஷ் சிவன், நயன்­தாரா தயா­ரிப்­பில் உரு­வாகி உள்­ளது 'கூழாங்­கல்'. வினோத்­ராஜ் இயக்கி­ உள்­ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்­கெ­னவே ரோட்­டர்­டா­மில் நடந்த அனைத்­து­ல­கத் திரைப்­பட விழா­வில் 'டைகர் விருது' பெற்­றுள்­ளது 'கூழாங்­கல்'.

இந்­நி­லை­யில், 'சிறந்த வெளி­நாட்டுத் திரைப்­ப­டம்' என்ற பிரி­வில் இந்­தியா சார்­பில் பங்­கேற்க இதைத் தேர்வு செய்­துள்­ள­னர்.

வித்யா பாலன் நடித்த 'ஷேர்னி', விக்கி கவு­ஷல் நடித்த 'சர்­தார் உதம்', மலை­யா­ளத்­தில் மார்ட்­டின் ப்ர­கத் இயக்­கிய 'நாயாட்டு', தமிழில் இருந்து 'மண்­டேலா', 'கூழாங்­கல்' ஆகிய படங்­களைத் தேர்­வுக் குழு­வி­னர் பரி­சீ­லித்­த­னர்.

இந்­தப் படங்­களை இயக்­கு­நர் ஷாஜி என்.கருண் தலை­மை­யி­லான பதி­னைந்து பேர் கொண்ட குழு அனைத்­துப் படங்­க­ளை­யும் பார்­வை­யிட்ட பின்­னர் 'கூழாங்­கல்' படத்தை ஒரு­ம­ன­தா­கத் தேர்வு செய்­த­தா­கத் தெரி­கிறது.

2022ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஆஸ்­கார் விருது வழங்­கும் விழா நடை­பெற உள்­ளது.

ஒவ்­வோர் ஆண்­டும் சிறந்த அயல்­நாட்டுத் திரைப்­படம் என்­கிற பிரி­வில் ஆஸ்­கார் போட்டிக்கு இந்­தியா சார்­பில் ஒரு படம் பரிந்­து­ரைக்­கப்­படும்.

"நமது கனவு நன­வாக இன்­னும் இரண்டு கட்­டங்­களே உள்­ளன. இது பெரு­மைக்­குரிய, மகிழ்ச்­சி­யான தரு­ணம்," என்று விக்­னேஷ் சிவன் தமது டுவிட்டர் பதி­வில் குறிப்­பிட்டுள்­ளார்.

அவ­ரது பதிவை அடுத்து திரை­யு­ல­கத்­தைச் சேர்ந்த பலர் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

'கூழாங்­கல்' ஆஸ்­கார் விரு­தைப் பெறும் என்று ரசி­கர்­களும் கூறியுள்ளனர்.