தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளியேறினார் கண்ணம்மா

1 mins read
ea7c637f-a3a8-4947-ae1b-56373dc8528b
-

விஜய் தொலைக்­காட்­சி­யில் ஒளி­

ப­ரப்­பாகி வரும் 'பாரதி கண்­ணம்மா' நாட­கம் மிகப்­பெ­ரிய ரசி­கர்­ பட்டாளத்தைத் தன்வசம் வைத்திருக்கிறது.

தற்­போது விறு­வி­றுப்­பு­ட­னும் பல திருப்­பங்­க­ளு­ட­னும் ஓடிக்­கொண்­டி­ருக்­கும் இந்த நாட­கத்­தில் கண்­ண­ம்மா­வாக நடித்து வந்த 'ரோஷினி ஹரிப்­ரி­யன்' நாட­கத்­தி­லி­ருந்து திடீ­ரென

வில­கி­யுள்­ளார்.

'மாட­லிங்' மூலம் தன்­னு­டைய வாழ்க்­கை­யைத் தொடங்­கிய ரோஷினி அக்­டோ­பர் 23ஆம் தேதி படப்­பி­டிப்­பில் கலந்­து­கொண்­டார்.

படப்­பி­டிப்பு முடிந்­த­தும், "இன்று நான் இந்த நாட­கத்­தில் நடிப்­ப­தில் இருந்து வெளி­யே­று­

கி­றேன்," என்று கூறி­யுள்­ளார். இது படப்­பி­டிப்புக் குழு­வி­னரை அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி இருக்­கிறது.

சின்­னத் திரை­யில் நடித்­த­தன் மூலம் பெரிய திரை­யில் நடிக்க பல வாய்ப்­பு­கள் அவரைத் தேடி வந்தன. அத­னால்­தான் ரோஷினி இந்த முடி­வுக்கு வந்­தார்," என்று அவ­ரு­டைய நெருங்­கிய நண்­பர் கூறி­யுள்­ளார்.

இவரின் இந்த முடிவு பாரதி கண்­ணம்மா ரசி­கர்­க­ளி­டையே அதிர்ச்­சியையும் நாட­கத்­திற்கு மிகப்­பெ­ரிய பின்­ன­டை­வை­யும் ஏற்­ப­டுத்­திள்­ளது.