கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் திடீர் மரணம்

கன்னடத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனீத் ராஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 46.


நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து, இன்று முற்பகல் 11.30 மணிக்கு பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் புனீத் அனுமதிக்கப்பட்டார்.


கன்னடப் படவுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் இளைய மகன்தான் இவர்.


தம் தந்தை நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி, திரையுலகில் அடியெடுத்து வைத்த புனீத், ‘அப்பு’, ‘ராஜகுமார’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகன்.


‘பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட புனீத்தின் மறைவால் இந்தியத் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


“திறமையான நடிகரான ‘பவர் ஸ்டார்’ புனீத் ராஜ்குமாரின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. தமது நடிப்புத் திறமையாலும் எளிமையாலும் கன்னட மக்களின் இதயங்களைக் கொள்ளைகொண்டவர். அவரது மறைவு கர்நாடகாவிற்குப் பேரிழப்பு,” என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


கொரோனா காலகட்டத்தில் இல்லாதவர்களுக்கு வாரி வழங்கிய நடிகர் சோனு சூட், “இதயம் உடைந்துவிட்டது. உனது பிரிவால் எப்போதும் உழல்வேன் சகோதரா!” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!