சூப்பர் ஸ்டாரின் கடைசிப் படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
சூப்பர் ஸ்டார் என்று பட்டப்பெயருடன் வலம் வந்துகொண்டு இருக்கும் ரஜினிகாந்த் தனது 170வது படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போடப்போவதாக அறிவித்து இருக்கிறார். அவரின் கடைசிப் படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி தானாக இருக்கவேண்டும் என்று பலரும் முயற்சிக்க தனுஷுக்கு அடித்தது அந்த யோகம். இதனால் ரஜினி குடும்பத்தினர், தனுஷ்
ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168வது படம்
'அண்ணாத்த'. இமான் இசை
அமைப்பில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். படம் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தையடுத்து 'தலைவர் 169' படத்தைக் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
'தலைவர் 170' படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போட முடிவு செய்திருக்கிறார் ரஜினி. அதனாலேயே ரஜினியின் கடைசிப் படத்தை இயக்க பலர் ரஜினிக்கு தூது
அனுப்பியும் நேராகச் சென்றும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தும் வந்தனர். ஆனால் அந்த வாய்ப்பை தன் மருமகன் தனுஷுக்கு
கொடுத்துவிட்டார் ரஜினி என்று கூறப்படுகிறது.
ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷுக்கு தன் தலைவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது, குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது நடிக்கவேண்டும் என்ற ஆசை நெடு நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆசையை அவர் பலமுறை தெரிவித்தும் நிறைவேறவில்லை.
இந்நிலையில் தன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து மருமகனை திக்குமுக்காட வைத்திருக்கிறாராம் ரஜினி. மேலும்
ரஜினியின் கடைசிப் படத்தை மகள்கள் ஐஸ்வர்யாவும் சவுந்தர்யாவும் சேர்ந்து தயாரிக்கப் போகிறார்
களாம். ஆக, 'தலைவர் 170' ஒரு குடும்பத் தயாரிப்பாக உருவாக இருக்கிறது. 'ப.பாண்டி' படம் மூலம் இயக்குநரான தனுஷ் தன் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார்.
பலருக்கும் பிடித்த படமாக அமைந்திருந்தது 'ப. பாண்டி'. அதனால் 'தலைவர் 170' படத்தை நிச்சயம் சிறப்பாக எடுப்பார் என்று
நம்பப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி நடித்திருக்கும் 'அண்ணாத்த' படத்தின் முன்னோட்டக் காட்சி புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. முன்னோட்டக் காட்சியைப் பார்த்த பலரும் 'ரஜினியின் அந்த சிரிப்பு, ஸ்டைல், குறும்பு தனி அழகு' என்று டுவிட்டரில் பதிந்து வருகின்றனர்.
முன்னோட்டக் காட்சியைப் பார்த்த ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், "அண்ணாத்த! வின்டேஜ்
ரஜினியிசம்! 'முத்து', 'அருணாச்சலம்', 'படையப்பா' வரிசையில் தலைவரைப் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் திரையில் அவரின் மாய வித்தையைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். வா சாமி! இது தலைவர் திருவிழா" என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
தனுஷின் டுவிட்டைப் பார்த்தவர்கள், "நீங்கள் சொல்வது மிகவும் சரி. கிராமத்து ரஜினியைப் பார்க்க முடிகிறது. மாமனாரை இப்படி தலைவர், தலைவர்னு கொண்டாடும் மருமகன் எத்தனை பேருக்கு கிடைக்கும்? ரஜினி கொடுத்து வைத்தவர்.
"நீங்களும் தலைவரும் தேசிய விருது விழாவில் விருது வாங்கியதைப் பார்த்து சந்தோஷப்பட்டோம். மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துகள்," என்று பதிவிட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தமிழ்ப் படங்
களுக்கான வியாபாரம் பெரிய அளவில் வர ரஜினிகாந்தின் 'சிவாஜி' படம்தான் காரணம்.
அது முதல் அங்கு தமிழ்ப் படங்களுக்கான வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. தீபாவளிக்கு 'அண்ணாத்த' தமிழ்ப் படம் 416 திரையரங்குகளில் திரையிட உள்ளார்கள்.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்கள் வழக்க நிலைக்கு வந்து கொண்டிருக்கின்
றனர்.
இந்த சூழ்நிலையில் 'அண்ணாத்த' படம் மக்களை மேலும் அதிக அளவில் திரையரங்கு
பக்கம் வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

