ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு திகில் படத்தை உருவாக்கி வருகிறார் பெருமாள் வரதன்.
இவர் இணை ஒளிப்பதி வாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
"பல்லவ மன்னர்களில் முக்கியமானவர் நந்திவர்மன். அவர் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடந்த போரில் அவருடைய ஊரே பூமிக்குள் புதைந்துவிடுகிறது.
"அதில் இருந்து தினமும் இரவில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன.
"அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது என முடிவெடுக்கிறார்கள். இதுகுறித்து கேள்விப்படும் ஆராய்ச்சியாளர்கள் அந்த ஊருக்கு வருகின்றனர். அவர்களில் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்றாக இருக்கும்," என்கிறார் பெருமாள் வரதன்.

