ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில், தோற்றங்களில் நடிக்கக் கூடாது என்பதில் தாம் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார் ஹரிஷ் கல்யாண்.
அதே சமயம் தாடியுடன் இருப்பதுதான் தமக்குப் பொருத்தமாக உள்ளது என ரசிகர்கள் பலர் கூறியதாகச் சொல்கிறார்.
அண்மையில் வெளியீடு கண்ட 'ஓ மணப்பெண்ணே' படத்தில் தனது நடிப்பு நன்றாக இருந்ததாக விமர்சகர்கள் பலர் பாராட்டி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிடும் ஹரிஷ், மற்ற இளம் கதாநாயகர்களைப் போலவே தமக்கும் 'மாஸ் ஹீரோ' ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது என்கிறார்.
காதல் நாயகனாகவோ, பக்கத்து வீட்டுப் பையன் என்ற தோற்றத்தில் தொடர்ந்து நடிப்பதையோ தாம் விரும்பவில்லை என்றாலும், அத்தகைய வாய்ப்புகள்தான் அதிகம் தேடி வருவதாக கூறுகிறார் ஹரிஷ்.
"உச்ச நாயகனாக வர வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அந்த இடத்தைப் பிடிக்க பல வெற்றிப் படங்களில் நடித்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன்.
"இதுவரை நடித்த படங்களில் தாடியுடன்தான் அதிகம் காணப்படுகிறீர்கள் என்று பலர் சுட்டிக்காட்டி உள்ளனர். உண்மையில் குறுந்தாடியுடன் இருப்பதுதான் என் தோற்றத்துக்கு அழகாக, பொருத்தமாக உள்ளது என்று நான் நம்புகிறேன்," என்று சொல்பவர், எதிர்மறை, வில்லன் வேடங்களிலும் நடிக்க தயாராக உள்ளாராம்.
"சில விஷயங்களைச் சோதித்துப் பார்க்கத் தயங்கக் கூடாது. இன்றுள்ள முன்னணி நடிகர்கள் எல்லோருமே இவ்வாறு சில சோதனைகளில் நிச்சயம் ஈடுபட்டிருப்பார்கள். வில்லன் கதாபாத்திரம் வித்தியாசமாகவும் புதிய கதைக்களத்துடனும் அமைந்திருக்கும் பட்சத்தில், அதில் நடிக்கத் தயங்க மாட்டேன்.
சசியின் பட வேலைகள் துவங்கிவிட்ட நிலையில், இளனுக்கு தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதனால் அந்தப் படத்தை முடித்துவிட்டு வரும் வரை ஹரிஷ் காத்திருக்க நேரும்.
கல்லூரி மாணவராக நடிக்கக் கேட்டு சிலர் அணுகியுள்ளனராம். ஹரிஷும் அதற்கு தயாராகவே உள்ளார்.
"முன்பெல்லாம் கல்லூரியை மையப்படுத்தும் கதைகளில் முன்னணி நாயகர்கள் நடித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 'சேது', 'காதல் தேசம்', 'மின்னலே', 'சில்லுனு ஒரு காதல்' போன்ற படங்கள் தமிழில் வெளியாகவில்லை. எனவே, அது போன்ற படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன்," என்று சொல்லும் ஹரிஷ், 'ஆந்தாலஜி' வகைப் படங்களிலும் நடிக்கத் தயாராக உள்ளாராம்.
"கல்லூரிக் கதைகள் சிலவற்றைக் கேட்டுள்ளேன். அவற்றுள் ஏதேனும் ஒரு கதை எனக்கு பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றினால் நடிப்பேன்.
"உச்ச நட்சத்திரம் ஆக வேண்டும் என்ற ஆசை ஒரே நாளில் நிறைவேறி விடாது என்பதை அறிவேன். வெற்றிப் படங்களைக் கொடுக்க முயற்சி செய்வேன்," என்கிறார் ஹரிஷ் கல்யாண்.

