இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைத்துள்ளது. நகைச்சுவையில் கலக்கியுள்ள இப்படத்தைக் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்குச் சென்று பார்த்து வருகின்றனர். அதனால் திரையரங்கு அதிபர்களை 'டாக்டர்' குளிர வைத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்து இருக்கிறதாம். அவர் கேட்கிற சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள் என்கின்றனர் கோடப்பாக்கத்துப் புள்ளிகள்.
இதன் மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யாவுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் சிவகார்த்தி கேயன். சிவகார்த்திகேயன் தனியார் தொலைகாட்சியில் வேலை செய்தபோது, ரூ.2000தான் சம்பளமாக வாங்கியுள்ளார். இன்று பல கோடிகளை சம்பளமாக வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்று பேசப்படுகிறது.