'நான் கலகலப்பான பெண்'

3 mins read
d1be9174-3e92-46ce-bd94-6d36238a0136
-

உயி­ரோட்­ட­முள்ள, உணர்­வு­பூர்­வ­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­கி­றார் இளம் நாயகி மிர்­ணா­ளினி. தீபா­வ­ளி­யின்­போது இவர் நடித்த இரண்டு படங்­கள் வெளி­யீடு கண்டுள்­ளன.

'எனிமி', 'எம்­ஜி­ஆர் மகன்' ஆகிய அவ்­விரு படங்­களும் வசூல் ரீதி­யில் தயா­ரிப்­புத் தரப்­புக்கு மன­நி­றைவு அளித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. எனவே இந்த ஆண்டு தீபா­வளி தமக்கு இரட்­டிப்பு மகிழ்ச்­சியைத் தந்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் மிர்­ணா­ளினி.

"இரு படங்­க­ளி­லும் எனது கதா­பாத்­தி­ரங்­கள் முற்­றி­லும் மாறு­பட்­ட­தாக அமைந்­துள்­ளன. விஷால் படத்­தில் அமை­தி­யான மருத்­துவ மாண­வி­யா­க­வும் இன்­னொரு படத்­தில் கல­க­லப்­பான இளம் பெண்­ணா­க­வும் நடித்­துள்­ளேன்.

"உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மா­னல் நிஜத்­தி­லும்­கூட நான் குறும்­புக்­காரப் பெண்­தான். என்­னால் ஓரி­டத்­தில் உட்­கார்ந்­திருக்க முடி­யாது. யாராக இருந்­தா­லும் தயக்­கம் இன்றி என்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்கொண்டு பேசத் தொடங்­கி­வி­டு­வேன்.

'எம்­ஜி­ஆர் மகன்' படத்­தில் அத்­த­கைய கதா­பாத்­தி­ரம் அமைந்­த­தால், அதி­கம் மெனக்­கெ­டா­ம­லேயே இயல்­பாக நடிக்க முடிந்­தது. என்னை அமை­தி­யாக இருக்­கச் சொன்­னீர்­கள் எனில், அதுவே எனது வாழ்­வின் மிகக் கடி­ன­மான பொழு­தாக இருக்­கும்.

"மருத்­துவ மாண­வி­யாக அமை­தி­யான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தது சவா­லாக இருந்­தது. எனி­னும் எனது கதா­பாத்­தி­ரத்­தை­யும் அதற்­கான நடிப்­பை­யும் ரசி­கர்­கள் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர். விமர்­ச­னங்­க­ளி­லும் என்­னைப் பாராட்டி உள்­ள­னர். அவை­தான் எனக்­கான தீபா­வ­ளிப் பரி­சு­கள்," என்­கி­றார் மிர்­ணா­ளினி.

'ஓடிடி' தளங்­கள், திரை­ய­ரங்­கு­கள், தொலைக்­காட்சி உள்­ளிட்ட அனைத்து தளங்­க­ளுமே தேவை என்று குறிப்­பி­டு­ப­வர், திற­மையை வெளிப்­ப­டுத்த பல­ருக்கு வாய்ப்பு கிடைக்­கும் என்­கி­றார். இவ­ரும்­கூட 'டிக்­டாக்' செய­லி­யில் வெளி­யிட்ட காணொளிகள் மூலம்­தான் ரசி­கர்­கள் மத்­தி­யில் பிரபலமா­னார்.

"நமது இலக்­கு­க­ளைச் சென்­ற­டைய பல பாதை­கள் உள்­ளன. அவற்­றுள் எதைத் தேர்வு செய்­கி­றோம், எப்­போது அந்த முடிவை எடுக்­கி­றோம் என்­ப­து­தான் முக்­கி­யம். காணொ­ளிப்­ப­தி­வு­கள், குறும்­ப­டங்­கள் என பல வழி­கள் உள்­ளன.

"அதே­ச­ம­யம் இது­போன்ற வாய்ப்­பு­கள் கிடைக்­கா­த­வர்­களும் கூட திரை­யு­ல­கில் தொடர்ந்து அறி­மு­க­மாகி வந்­துள்­ள­னர். திற­மையை ஒளித்து வைக்க முடி­யாது. அது நிச்­ச­யம் ஏதோ ஒரு தளத்­தின் வழி வெளிப்­படும்," என்­கி­றார் மிர்­ணா­ளினி.

தெலுங்­கில் இவர் நடித்த 'கட­ல­கொண்டா கணேஷ்' படம் வசூ­லைக் குவித்­துள்­ளது. எனி­னும் தெலுங்­கில் தேடி வந்த பல வாய்ப்­பு­களை நிரா­க­ரித்­து­விட்­டா­ராம். கார­ணம், தமிழ் மொழி­யில்­தான் சர­ள­மா­கப் பேச வரும் என்­கி­றார்.

"மொழியை அறிந்து, வச­னங்­களைப் புரிந்துகொண்டு நடிப்­பது நிச்­ச­யம் ரசி­கர்­க­ளி­டம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். தமி­ழில் நடிப்­பது வசதி­யாக இருப்ப­தால் என்­னு­டைய நடிப்பை மெரு­கேற்ற இய­லும் என நம்­பு­கி­றேன்.

"மற்ற மொழி­கள் என்­றால் வச­னங்­களை மனப்­பா­டம் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். தெலுங்­கி­லும் மலை­யா­ளத்­தி­லும் இப்­ப­டித்­தான் செய்கி­றேன்.

"கடி­னமாக உள்­ளது என்­றா­லும் சமா­ளிக்க முடி­கிறது," என்று சொல்­லும் மிர்­ணா­ளினி, அறி­மு­க­மான வேகத்­தில் ஐந்து படங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

மேலும் இரண்டு புதுப்­ப­டங்­க­ளி­லும் இணை­யத் தொடர் ஒன்­றி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ள­தா­கத் தக­வல்.

"தமிழ் அல்­லாத பிற­மொ­ழிப் படங்­களில் நடிக்­கக்கேட்டு வந்த சில வாய்ப்­பு­களை நான் ஏற்க மறுத்­தது உண்மை­தான்.

"எதிர்­ம­றை­யான, மர்­மங்­கள் நிறைந்த கதா­பாத்­தி­ரங்­களை நான் விரும்­பு­வ­தில்லை. அதே­வே­ளை­யில் நகைச்­சு­வை­யும் நையாண்­டி­யும் உள்ள கதைக்­களங்­கள் என்­றால் உற்­சா­க­மாகி ­வி­டு­வேன்.

"இன்­றைய பர­ப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லில், அனைத்­தில் இருந்­தும் விலகி நின்று, இரண்டு மணி நேரம் நிம்­ம­தி­யா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் இருக்க வேண்­டும் என்­பதே பெரும்­பா­லா­னோ­ரின் விருப்­ப­மாக உள்­ளது. அதை நிறை­வேற்­றக் கூடிய கதை­க­ளை­யும் கதா­பாத்­தி­ரங்­க­ளை­யுமே நான் ஏற்க விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் மிர்­ணா­ளினி.