வெடிக்கப்போகும் பூகம்பம்

பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்கும் சூர்யா

'ஜெய் பீம்' வெற்­றியை அடுத்து அடுத்த வெற்­றிக்­குத் தயா­ரா­கி­றார் நடி­கர் சூர்யா. இவர் தற்­பொ­ழுது எடுத்து இருக்­கும் கதைக்­க­ளம் பொள்­ளாச்சி சம்­ப­வம்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன் விஸ்­வ­ரூ­ப­மாக கிளம்­பிய அந்தச் சம்­ப­வத்தை வைத்து 'எதற்­கும் துணிந்­த­வன்' என்ற படத்­தில் நடித்து வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கிறது. அத­னால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ச்­சி­யில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் கார்த்தி நடித்­தி­ருந்த 'கடைக்­குட்டி சிங்­கம்' படம் அவரை மிகப்­பெ­ரிய உய­ரத்­திற்கு கொண்டு சென்­றது. அதைப்­போல சூர்­யா­வின் திரை வாழ்க்­கை­யி­லும் பாண்­டி­ரா­ஜின் 'எதற்­கும் துணிந்­த­வன்' படம் பெரிய வெற்­றி­யைக் கொடுக்­கும் என்­கிற எதிர்­பார்ப்பு எழுந்­தி­ருக்­கிறது.

'எதற்­கும் துணிந்­த­வன்' முன்­னோட்­டக் காட்­சி­யில் ஆள் உயர வாளை தூக்­கிக்­கொண்டு எக்­கச்­சக்க கோபத்­தோடு வரும் சூர்யா நிஜ­மா­கவே இளை­ஞர்­க­ளின் மனம் கவர்­கி­றார்.

தனி­மை­யான பகு­தி­யில், பாழ­டைந்த பங்­க­ளா­வில் ஏரா­ள­மான இளை­ஞர்­கள் தலைகுப்­பு­றக் கிடக்க ஒரு­வ­னின் காலைப் பற்றி இழுத்­துக்­கொண்டு வரும் சூர்யா, கடும் கோபத்தில் இருக்­கி­றார்.

கோபத்துக்கான கார­ணம் என்ன என விசா­ரித்­த­தில் தெரிந்­தவை இங்கே!

சில ஆண்­டு­க­ளுக்கு முன் பயங்­கர பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய, தமிழ்­நாட்­டையே கொந்­த­ளிக்க வைத்த பொள்­ளாச்சி சம்­ப­வத்தை மைய­மாக வைத்தே 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்தை எடுக்கிறார்­இயக்குநர் பாண்­டி­ராஜ்.

உண்மை எப்­போ­தும் வெளியே வந்த செய்­தி­

க­ளை­விட பயங்­க­ர­மா­ன­தாக இருக்­கும் என்­பார்­கள். அது­போ­லவே 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தில் பொள்­ளாச்சி சம்­ப­வத்­தில் நடந்த பல விஷ­யங்­க­ளைக்கொண்டு கதை சொல்­லி­யி­ருக்­கி­றா­ராம்

பாண்­டி­ராஜ்.

'மாஸ்' நாய­கன் பிம்­பத்தை அடை­யத்­தான் அத்­தனை நடிகர்களும் தவம் கிடக்­கி­றார்­கள். எளி­தில் கிடைத்­தி­டாத அந்த பிம்­பத்தை அர்­ப்ப­ணிப்பு எனும் மந்­தி­ரத்­தால் அடைந்­த­வர் சூர்யா.

ஆனால், அந்த பிம்­பத்­திற்­குள்

மட்­டும் தன்னை சுருக்­கிக்­கொள்­ளா­மல் பலவித­மான கதைக்களங்­க­ளை­யும் கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் அவ­ரால் செய்­து­பார்க்க முடி­கி­ற­தெ­னில் அது சினிமா எனும் கலை­யின் மீதான காத­லும்

அர்­ப்ப­ணிப்­பும் மட்­டுமே.

நாயகன் என்ற பிம்­பத்­திற்கு பின்­னால் சென்­றால் ஒரு நல்ல கலை­ஞ­னாக இருக்க முடி­யாது எனும் பாடத்தைத் தெரிந்து

வைத்­தி­ருப்­ப­தால்­தான் சூர்­யா­வால், `பசங்க-2' போன்ற படத்­தி­லும் நடிக்க முடிந்­தது.

இடை­யில் தொடர்ந்து தோல்விப் படங்­கள் வந்து `சூர்யா இனி அவ்­வ­ள­வு­தான்' என காது­பட பேசி­ய­வர்­களைச் `சூர­ரைப் போற்று' படத்தில் முக­மெல்­லாம் வியர்வை வழிய சுருட்டு பிடிக்­கும் ஒற்றைக் காட்சி திருப்பி அடித்­தது.

தோல்­வி­கள் பல கண்­டும் அவ­மா­னத்­தில் கூனிக் குறு­கா­மல், கூன் விழுந்த முது­கு­டன் குனிந்து நடித்தே சாதித்த வெறி, நடிப்­ப­தைத் தாண்டி நல்ல படங்­களை தயா­ரிக்­க­வும் இறங்­கிய தைரி­யம், இது எல்­லா­வற்­றை­யும்விட `ஒரு கலை­ஞ­னின் குரல் என்­றும் சமூ­கத்­திற்­கா­ன­தாக இருக்கவேண்­டும்' என்­கிற தெளிவு, அதில் அவர் முன்­வைக்­கின்ற கருத்­து­கள், இழப்­ப­தற்கு ஒன்­று­மில்லை, மீட்­ப­தற்கோ சொர்க்­கமே இருக்­கிறது எனும் சிந்­தனை இப்படி எத்­த­னையோ குணங்­கள் மூலம் சூர்யா, எதற்­கும் துணிந்­த­வர் என்ற எண்­ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

பொள்ளாச்சி விவகாரம் தண்ணியில் போட்ட கல்லாக கிடக்கும் இந்த வேளையில் மீண்டும் அதைக் கையில் எடுத்திருக்கும் எதற்கும் துணிந்தவரிடம் அச்சம் கொண்டு நிற்கிறது பொள்ளாச்சிக் கூட்டம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!