இயக்குநர் பத்ரி இயக்கத்தில் 'பட்டாம்பூச்சி' என்ற படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
ஒரு படத்தில் நாயகனை நிலைநிறுத்த வேண்டுமென்றால் அதற்குச் சரியான பலமான எதிரி வேண்டும். ஒரு நாயகன் யாருடன் மோதி வெற்றி பெறுகிறார் என்ற வரலாறு சினிமாவில் முக்கியம். சாதாரணமான, பலமில்லாத எதிரியை வீழ்த்தி
நாயகன் வெற்றி பெறுகிறார் என்றால் அந்தப் படம் வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைந்தது இல்லை.
80களில் முன்னணி நடிகர்கள் நாயகர்களாக மட்டுமே நடித்து வந்தனர். வில்லன் வேடங்களில் நடித்ததே கிடையாது. அது
தற்பொழுது மாறி இருக்கிறது. நாயகனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் முன்னணி நாயகர்களும் வில்லன்களாக களமிறங்கி சாதித்து வருகின்றனர்.
நாயகன் என்ற பிம்பத்தை முதலில் உடைத்
தெறிந்தவர் அரவிந்த் சாமி. இவர் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். அடுத்து கார்த்திக் 'அனேகன்' படத்திலும் ராணா
டகுபதி 'பாகுபலி' படத்திலும் விஜய் சேதுபதி 'மாஸ்டர்' படத்திலும், உலக நாயகன் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் நான்கு முன்னணி நடிகர்களும் வில்லன்களாக நடிக்கின்றனர்.
'பட்டாம்பூச்சி' மூலம் ஜெய் வில்லனாக சிறகடித்துப் பறப்பார் என்கிறது படக்குழு.

