'36 மணி நேரம் ஓய்வின்றி நடித்தார்'

'36 மணி நேரம் ஓய்வின்றி நடித்தார்'

2 mins read
5086376c-ea48-473d-98fa-dee3c41f09ea
-

முதன்­மு­றை­யாக 'பொன் மாணிக்­க­வேல்' படத்­தில் காவல்­துறை உய­ர­தி­கா­ரி­யாக நடித்­துள்­ளார் பிர­பு­தேவா.

அந்த அனு­ப­வம் மிக­வும் வித்­தி­யா­ச­மா­க­வும் மறக்க முடி­யா­த­தா­க­வும் இருந்­த­தாக அவர் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­தின் இறு­திக்­கட்ட காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­ய­போது, தொடர்ந்து 36 மணி நேரம் ஓய்­வில்­லா­மல் நடித்­தா­ராம் பிர­பு­தேவா. அவர் இந்த அளவு ஒத்­து­ழைப்­பார் என எதிர்­பார்க்­கவே இல்லை என்­கி­றார் இயக்­கு­நர் முகில்.

இந்­தப் படத்­தில் பிர­பு­தேவா­வும் நிவேதா பெத்­து­ரா­ஜும் இணைந்து நடித்­துள்­ள­னர். மறைந்த இயக்­கு­நர் மகேந்­தி­ரன், பேரா­சி­ரி­யர் கு.ஞான­சம்­பந்­தம், 'பாகு­பலி' பிர­பா­கர் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் சிலை கடத்­தல் தடுப்­புப் பிரி­வின் தலை­வ­ராக இருந்த காவல்­துறை உய­ர­தி­காரி பொன்.மாணிக்­க­வே­லின் வாழ்க்­கை­யில் நடந்த பல்­வேறு சம்­ப­வங்­களை அடிப்­படை­யாக வைத்து இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது.

"இறு­திக்­காட்­சி­க­ளைப் பட­மாக்­கும்­போது படத்­தில் நடித்­துள்ள அனை­வ­ரை­யும் அழைக்க வேண்டி இருந்­தது. எனவே அவர்­க­ளு­டைய கால்­ஷீட்டை உறுதி செய்து­விட்டு, இரண்டு நாள்­களில் படப்­பி­டிப்பை நடத்தி முடிக்க தீர்­மா­னித்­தோம்.

"ஆனால் அச்­ச­ம­யம் பிர­பு­தேவா மொரீஷி­யஸ் செல்ல வேண்டி இருந்­தது. அத­னால் அதற்கு முன்பே படப்­பி­டிப்பை வைத்­துக்கொள்­வோம் என்று அவர் தரப்­பில் சொல்­லப்­பட்­டது. இத­னால் புதுச்­சிக்கல் ஏற்­பட்­டது.

"பிர­பு­தேவா சொன்­ன­படி திட்­ட­மிட்­டால் தொடர்ந்து 36 மணி நேரம் படப்­பி­டிப்பை நடத்த வேண்­டி­யி­ருக்­கும். அவ­ரி­டம் இதைச் சொன்­ன­போது, பர­வா­யில்லை... பார்த்­துக் கொள்­வோம் என்று கூறி­விட்­டார். தொடர்ந்து இரவு பக­லாக எப்­படி வேலை செய்ய இய­லும் என்று நினைத்­தோம். ஆனால் அது­தான் நடந்­தது.

"சாப்பிட கூட நேரம் இல்லை. அந்த 36 மணிநேரமும் அவர் எங்களுக்காக நடித்துக் கொடுத்தார். அதன்பிறகே வெளிநாடு சென்றார்," என்கிறார் முகில்.