'சபாபதி' சுவரொட்டியால் வெடித்த சர்ச்சை

'சபாபதி' சுவரொட்டியால் வெடித்த சர்ச்சை

1 mins read
d39246c3-6155-475c-bf1c-75c8afa7bc11
-

சந்­தா­னம் நடிப்­பில் அடுத்து வெளி­யாக உள்ள 'சபா­பதி' படத்­தின் சுவ­ரொட்­டி­யால் சர்ச்சை வெடித்­துள்­ளது.

'தண்­ணீர் திறந்­து­வி­டக்­கோரி கண்­டன ஆர்ப்­பாட்­டம், திரண்டு வாரீர்' என எழு­தப்­பட்­டுள்ள சுவ­ரின் மீது சந்­தா­னம் சிறு­நீர் கழிப்­பது போன்ற புகைப்­ப­டம் அந்­தச் சுவ­ரொட்­டி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இது சமூக நல­னுக்­கா­கப் போரா­டும் போரா­ளி­களை இழிவு­படுத்­தும் வகை­யில் உள்­ள­தாக ஒரு தரப்­பி­னர் கூறி­யுள்­ள­னர். எனவே இந்­தச் சுவ­ரொட்­டியை திரும்­பப் பெறவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என அவர்­கள் எச்சரித்துள்ளனர்.