அசலையும் நகலையும் புகழும் திரைப்பிரபலங்கள்

அசலையும் நகலையும் புகழும் திரைப்பிரபலங்கள்

4 mins read
299d14e5-5ed5-4d21-8645-00cf42b69c79
-
multi-img1 of 2

'ஜெய் ­பீம்' திரைப்­ப­டத்­தின்

உண்­மை­யான நாய­கன்

வழக்­க­றி­ஞராக இருந்து பின்பு நீதிபதியானவர் சந்­துரு.

அவ­ரைத் திரை­யில் பிர­தி­

ப­லித்த நாய­கன் சூர்யா. இந்­தப் படத்­தில் சில காட்­சி­கள் ஒரு சமூ­கத்தை மறை­மு­க­மாக தாக்கி இருப்­ப­தாக சர்ச்­சைக்கு­உள்­ளா­னது. அத­னால் அந்த காட்­சி­கள் மாற்­றி­ய­மைக்­கப்­

பட்­டும் தொடர்ந்து சூர்­யா­வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி

இருக்­கிறது. அத­னால் திரை­யு­ல­கத்­தி­னர் பல­ரும் ஒன்று சேர்ந்து சூர்­யா­விற்கு ஆத­ர­வுக் குரல் கொடுத்து வரு­கின்­ற­னர்.

சில காட்­சி­கள் நீக்­கப்­பட்ட போதி­லும் 'ஜெய்­ பீம்' திரைப்­பட விவ­கா­ரம் தொடர்­பான சர்ச்சை அடங்­க­வில்லை. இந்­நி­லை­யில் நடி­கர் சூர்­யாவை எட்டி உதைப்­ப­வ­ருக்கு ரூ.1 லட்­சம் வழங்­கப்­படும் என்று பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­தி­னர் அறி­வித்து இருந்­த­னர். அந்த சர்ச்சை முடி­வ­தற்­குள் சூர்யா, ஜோதிகா இருவரும் 24 மணி நேரத்­தில் மன்­னிப்புக் கேட்க வேண்­டும் என்­றும் 5 கோடி ரூபாய் நஷ்­ட­ஈடு தரவேண்­டும் என்­றும் சூர்யா மீது வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

சூர்­யா­விற்கு திரை­யு­ல­கில் இருந்து முத­லில் யாரும்

ஆத­ரவு தெரி­விக்­காத நிலை­யில் நாளுக்கு நாள் இந்த

விவ­கா­ரம் விஸ்­வ­ரூ­பம் எடுத்து வரு­வ­தைப் பார்த்த இயக்­கு­நர் பார­தி­ராஜா, வெற்­றி­மா­றன், லோகேஷ் கன­க­ராஜ், தயா­ரிப்­பா­ளர் சங்­கம், திரைப்

பிர­ப­லங்­கள் என திரைத்­து­றை­யி­னர் பல­ரும் ஒன்று சேர்ந்து தங்­க­ளது ஆத­ரவை சூர்­யா­விற்கு தெரி­வித்து டுவிட்­டர் பக்­கத்­தில் பதிவு செய்து

வரு­கின்­ற­னர்.

அந்த வரி­சை­யில் வெற்றி மாறன், "இத்­த­கைய படங்­கள் மூலம் சமூக நீதி ஏற்­ப­டக்­

கூ­டாது என விரும்­பு­வோ­ருக்குப் பதற்­றத்தை ஏற்­ப­டுத்து­வது இயல்பே.

"சமூ­கத்­தில் நில­வும் பேதங்­

க­ளை­யும் அநீ­தி­க­ளை­யும் கேள்வி கேட்­கும் திரைப்­ப­டங்­களும் கூட சமூக நீதி ஆயுதங்­களே. ஆகை­யால் நாங்­கள் 'ஜெய் பீம்' படக்­கு­ழு­வு­டன் எப்­போ­தும் ஆதரவாக நிற்­போம்," என்று பதி­விட்­டுள்­ளார்.

இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான பார­தி­ராஜா, "பெரும்­பா­லும் சினிமா என்ற இயங்­கு­த­ளம்

மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தவே முயற்­சிக்­கும். அத­னால்­தான் கதா­நா­ய­கன் நல்­ல­வ­னாக சித்­திரிக்­கப்­ப­டு­

கி­றான். கடந்த கால சம்­ப­வங்­க­ளைப் பட­மாக்­கும்­போது அதைப் பட­மா­கப் பார்த்­து­விட்டு சமூக மாற்­றத்­திற்கு அது எவ்­வ­கை­யில் பய­னா­கும் என்­பதை மட்டு­மே பார்க்க வேண்­டும். அதில் பூதக்­கண்­ணா­டியை அணிந்து கொண்டு குற்­றம் பார்க்­கத் தொடங்­கி­னால் எந்த ஒரு படைப்­பும் எளி­யோ­ருக்­காகப் பேசா­மல் முடங்­கி­வி­டும்.

"இன்­றைய எளி­யோர்­க­ளின் சமத்­துவ அதி­கா­ரத்­திற்­காக அன்றே பேசி­யது நாங்­கள்­தான். அன்று என் 'வேதம் புதிது' படத்தை முடக்க முயற்­சித்­த­போது புரட்­சித்

தலை­வர் உடன் நின்­றார். அந்த படைப்பு எத்­த­கைய தாக்­கத்தை மக்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­தி­யது? அது­போன்­ற­தொரு படைப்­பு­தான் 'ஜெய் பீம்' பட­மும். இதைப் படைப்­பாக மட்­டுமே பார்க்கவேண்­டும்.

"தம்பி சூர்­யா­வைப் பொறுத்­த­

வ­ரை­யில் யாரை­யும் காயப்­ப­டுத்­தும் தன்மைக் கொண்­ட­வ­ரல்ல. கல்வி, எளி­ய­வர்­க­ளுக்­கான உதவி என நகர்ந்­து­கொண்­டி­ருப்­ப­வர்.

"ஓர் இயக்­கு­ந­ரின் சேக­ரிப்­பிற்கு தன்­னை­யும் தன் நிழ­லை­யும் தந்து உத­வி­யுள்­ள­வர். அவ­ருக்கு

எல்­லோ­ரும் சமம். யாரை­யும் ஏற்ற இறக்­கத்­தோடு பார்ப்­ப­வர் அவர் அல்ல. தன்­னால் எங்­கே­னும் ஒரு மாற்­றம் நிக­ழுமா? எனப் பார்ப்

­ப­வர்.

"ஓர் அலை­பே­சி­யில் முடிந்­

தி­ருக்க வேண்­டி­ய­தும் சிறு

தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்­டித் தீர்க்க வேண்­டி­ய­து­மான இந்­தப் பிரச்­

சினையை எதிர்­காற்­றில் பற்­றி­ எரியும் நெருப்­புத் துக­ளாக்­கி­யது ஏன் எனப் புரி­ய­வில்லை. எப்­போ­தும் நட்­போடு பய­ணப்­ப­டு­வோம்," என்று பதி­விட்­டுள்­ளார்.

இவ­ரைப்­போல பல­ரும் தங்­க­ளு­டைய டுவிட்­ட­ர் பக்கத்தில்

சூர்­யா­வு ஆத­ர­வாக பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டை­யில் நவம்­பர் 19ஆம் தேதி சந்­தா­னம் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள 'சபா­பதி' திரைப்

படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, "திரைப்­ப­டங்­களில் ஒரு­வரை உயர்த்திச் சொல்ல வேண்­டும் என்­ப­தற்­காக யாரை­யும் தாழ்த்­து­வது முறை­யா­னது அல்ல," என்று பேசி­யி­ருப்­பது சர்ச்­சையை

ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் கார­ண­மாக தற்­போது இணை­யத்­தில் சந்­தா­னத்­தின் 'பஞ்ச்' வச­னங்­கள் மூல­மா­கவே அவ­ரைக் கிண்டல் செய்து வரு­கின்­ற­னர்.

1993ஆம் ஆண்­டில் ராஜாக்­கண்ணு கொலை தொடர்­பாக நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின் சாராம்­சமே 'ஜெய் ­பீம்' திரைப்­ப­டம்.

13 ஆண்­டுகளாக நடை­பெற்ற இந்த வழக்­கில் கடந்த 2006ல் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. இதில் முக்­கிய அங்­கம் வகித்த சந்­துரு என்ற வழக்கறிஞர்தான் இந்­தக் கதையின் உண்மை கதா­நா­ய­கன்.

பல்­வேறு தரப்­பி­ன­ரின்

மிரட்­டல்­க­ளை­யும் அதி­கா­ரங்­க­ளை­யும் கடந்து அந்த வழக்­கில் ராஜாக்­கண்­ணு­வின் கொலைக்கு நீதி பெற்றுக் கொடுத்­தது வழக்­க­றி­ஞர் கே.சந்­து­ரு­வின் வாதங்­களே.

இவ­ரின் செயல்­பா­டு­கள் மற்ற நீதி­ய­ர­சர்­க­ளுக்கு ஓர் எடுத்­துக்­காட்­டா­கவே இருந்து வந்­துள்­ளது.

ராஜா­க்கண்ணு வழக்கு குறித்த இவ­ரது தக­வல்­களே படத்­தின் வெற்­றிக்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் நேற்று தமிழ்த் திரைப்­பட இயக்­கு­நர்­க­ளான

பாக்­கி­ய­ராஜ், பார்த்­தி­பன், பிர­பு­தேவா உள்­ளிட்­டோர் ஓய்வு பெற்ற நீதி­பதி சந்­து­ருவைச் சந்­தித்து பாராட்டு தெரி­வித்து நினை­வுப்­

ப­ரிசு வழங்­கி­னார்­கள்.

சமூக வலைத்­த­ளங்­களில்

சூர்­யா­வுக்கு மிரட்­டல் விடுக்­கும் வகை­யில் சிலர் கருத்து

தெரி­வித்து வரு­வ­தால் சென்னை தியா­க­ரா­ய­ந­கர் ஆற்­காடு தெரு­வில் உள்ள நடி­கர் சூர்யா

வீட்­டுக்கு போலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. துப்­பாக்கி ஏந்­திய போலிஸ் பாது­காப்பை சென்னை மாந­கரப் போலிஸ்

வழங்­கி­யுள்­ளது.

'நடிப்பில் ஆர்வத்துடன் இருந்த நடி­கர் விஜய்­காந்தை இப்­ப­டித்­தான் உசுப்­பி­விட்டு

அர­சி­ய­லுக்கு வர­வ­ழைத்­தார்­கள். அது­போ­லவே சூர்­யா­வை­யும் உசுப்­பி­விட்டு அர­சி­ய­லுக்­குள் இழுத்­து­வி­டப் போகி­றார்­கள்,' என்று ஒரு சிலர் ஆரு­டம் கூறி வருகின்றனர்.