இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர், 'மைந்தன்', 'கோலங்கள்'
உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளார். அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்திற்கு இவர்தான் வசனம் எழுதியிருந்தார். பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில்
நடித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் கடந்த 20 நாட்களாக சென்னையில் ுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய்த்தொற்று சரியான நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியாக
வேண்டிய நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. மனோகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளியான 'அண்ணாத்த', 'ஜெய் பீம்' படங்களின் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். சில தினங்களுக்கு முன்பு இவரின் தொண்டையில் புண்
ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் "மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு வாரம் அதிகம் பேசாமல் மௌனம் காக்க இருக்கிறேன். நான் நலமாகத்தான் இருக்கிறேன்," என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
சமந்தா நடித்த தெலுங்குப் படங்களில் முக்கியமான படம் 'ரங்கஸ்தலம்'. இந்தப் படத்தை இயக்கிய சுகுமார் அடுத்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'புஷ்பா' என்ற படத்தை இரண்டு
பாகங்களாக இயக்கி வருகிறார். இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இயக்குநர் சுகுமார், சமந்தாவிடம் கேட்டதையடுத்து உடனே நடனம் ஆட சம்மதித்து இருக்கிறார் சமந்தா. சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது இதுதான் முதல் முறையாம். அதனால்,
இந்தப் பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க இயக்குநர் சுகுமாரும் படக்குழுவினரும்
திட்டமிட்டுள்ளனர்.
விக்னேஷ் சிவன்
'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்னும் திரைப்
படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் விஜய் சேதுபதியின்
சுவரொட்டியும் மதியம் சமந்தாவின்
சுவரொட்டியும் மாலையில் நயன்தாராவின்
சுவரொட்டியும் வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா 'கண்மணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்
தக்கது.

