மரக்கன்றுகளை நட்டு அன்னதானம் செய்த விவேக் நண்பர்

நடி­கர் விவேக்­கின் மறைவு தந்த அதிர்ச்­சி­யில் இருந்து மெல்ல மீண்டு வரு­கி­றார் அவ­ரது நெருங்­கிய நண்­பர் 'செல்' முரு­கன்.

விவேக்­கின் பிறந்­த­நாளை முன்­னிட்டு, அவ­ரது நினை­வாக ஏரா­ள­மான மரக்­கன்­று­களை நட்­டுள்­ளார்.

விவேக் விட்­டுச்­சென்ற சில பணி­களை அவ­ரது சார்­பாக முன்­னெ­டுத்­துச் செல்­வ­து­தான் தமது முக்­கிய கடமை என்று சொல்­ப­வர், ஒரு கோடி மரக்­கன்­று­களை நட வேண்­டும் எனும் விவேக்­கின் கனவை அனை­வ­ரும் சேர்ந்து நிறை­வேற்ற வேண்­டும் என்­கி­றார்.

"வழக்­க­மாக விவேக் சாரின் பிறந்­த­நாள் அன்று காலை­யில் கோவி­லுக்­குச் சென்று திரும்­பிய பிறகு பல­ருக்கு அன்­ன­தா­னம் செய்­வோம். அவ­ருக்கு மிக­வும் பிடித்­த­மான விஷ­யங்­களில் அன்­ன­தா­னம் வழங்­கு­வ­தும் ஒன்று.

"இந்த ஆண்டு எனது வீட்­டுக்கு அரு­கி­லேயே சில­ருக்கு அன்­ன­தானம் செய்­தேன். மரம் வளர்க்க வேண்­டும் எனும் அவ­ரது கனவை நிறை­வேற்ற விரும்­பு­கி­றேன். இந்த ஆண்டு அதற்­காக பெரிய அள­வில் ஒரு நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தோம். இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் அந்த நிகழ்­வில் பங்­கேற்­ப­தாக கூறி­யி­ருந்­தார்.

"ஆனால், கடும் மழை பெய்­த­தால் நிகழ்ச்­சியை நடத்த முடி­ய­வில்லை. அடுத்த சில தினங்­களில் நிகழ்ச்­சியை நடத்­து­வோம். முன்­ன­தாக, ஒரு பள்­ளிக்­கூ­டத்­தில் சில மரக்­கன்­று­களை நட்டு வைத்­தோம். விவேக் சாரை யாரும் மறக்க முடி­யாது. எனவே, அவ­ரது கன­வும் நிச்­ச­யம் நிறை­வே­றும்," என்­கி­றார் 'செல்' முரு­கன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!