'எனது நீண்ட நாள் ஆசை'

'எனது நீண்ட நாள் ஆசை'

2 mins read
8dfc132a-56e2-4d66-afa4-5f262d6f1bfb
-

வாழ்க்கை வர­லாற்­றுப் படங்­களில் நடிக்க விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் அதிதி ராவ். அத்­த­கைய கதா­பாத்­தி­ரங்­களை தாம் மிக­வும் நேசிப்­ப­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

அதிதி திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி 15 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இருப்­பி­னும், ஒவ்­வொரு மொழி­யி­லும் விரல்­விட்டு எண்­ணக்­கூடிய படங்­களில் மட்­டுமே நடித்­துள்­ளார்.

கார­ணம், எண்­ணிக்­கை­யில் இவ­ருக்கு நம்­பிக்கை இல்­லை­யாம். நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் மட்­டுமே தமக்கு முக்­கி­யம் என்­கி­றார்.

"வாழ்க்கை வர­லாற்­றுப் படங்­கள் நேர்த்­தி­யாக எடுக்­கப்­படும் பட்­சத்­தில், அவை ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். அத­னால்­தான் அத்­த­கைய படங்­களை வர­வேற்­கி­றேன்.

"நான் முறைப்­படி நட­னம் பயின்­றுள்ள நடிகை. அத­னால் இயல்­பா­கவே இசை­யின் மீதான ஆர்­வம் எனக்கு அதி­கம்.

"அந்த வகை­யில் எம்.எஸ்.சுப்­பு­லட்­சு­மி­யின் வாழ்க்கை வர­லாறு பட­மாக்­கப்­பட்­டால் அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வேண்­டும் என்­பது எனது நீண்ட நாள் விருப்­பம். என்­றா­வது ஒரு நாள் அதற்­கான வாய்ப்பு அமை­யக்­கூ­டும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் அதிதி ராவ்.

இந்தி நடிகை ரேகா கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வேண்­டும் என்­றும் தமக்கு விருப்­பம் உள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ள அவர், தம்மை வெகு­வாகக் கவர்ந்த நடி­கை­களில் ரேகா­வும் ஒரு­வர் என்­கி­றார்.

சிறு வயது முதல் ரேகா நடித்த படங்­களை ஒன்றுவிடா­மல் பார்த்­துள்­ளா­ராம். அவ­ரது நடிப்­பும் உடல் மொழி­யும் தம்மை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது என்­கி­றார்.

தற்­போது தமி­ழில் நடன இயக்­கு­நர் பிருந்தா கோபால் இயக்­கும் 'ஹே சினா­மிகா' படத்­தில் நடித்து வரு­கி­றார் அதிதி. இதை­ய­டுத்து, மலை­யா­ளத்­தில் துல்­கர் சல்­மா­னு­டன் இணைந்து நடிக்க உள்­ளார்.

அதிதி ஹைத­ரா­பாத்­தில் பிறந்­த­வர் என்­றா­லும், தெலுங்கு மொழி­யில் சர­ள­மா­கப் பேச வரா­தாம். சிறு வய­தில் வட இந்­தி­யா­வில்­தான் அதிக காலம் இருந்­துள்­ளார்.

"தெலுங்கு பேச முடி­யா­விட்­டா­லும், வச­னங்­களை மட்­டும் தெளி­வா­கப் பேசி­வி­டு­வேன். கூடு­மா­ன­வரை அவற்­றுக்­கான அர்த்­தத்­தைப் புரிந்­து­கொண்டு நடிக்­கி­றேன். நள்­ளி­ர­வில் தூங்­கிக்கொண்­டி­ருக்­கும் என்னை எழுப்பி கேட்­டா­லும் கூட வச­னங்­களைச் சரி­யா­கச் சொல்­லி­வி­டு­வேன்.

"அத­னால்­தான் எனக்­கு­ரிய வச­னங்­களை முன்­கூட்­டியே தந்­து­வி­டு­மாறு இயக்­கு­நர்­க­ளைக் கேட்­டுக்கொள்­வேன். இதன் மூலம் வச­னங்­க­ளைப் பேசி நடிக்க பயிற்சி எடுக்க முடி­யும். அதன் பின்­னர் எனது சொந்­தக்­கு­ர­லில் வச­னங்­க­ளைப் பேசி நடிப்­பேன்," என்­கி­றார் அதிதி ராவ்.

அண்­மை­யில் தெலுங்­குப் படத்­தில் இடம்­பெ­றும் ஒரு பாடல் காட்­சியை பாறை­கள் நிறைந்த பகு­தி­யில் படாக்கி உள்­ள­னர். அதற்­காக வெறும் கால்­க­ளு­டன் நட­ன­மா­டி­யுள்­ளார் அதிதி.

"இது மிக­வும் கடி­ன­மான விஷ­யம் என்று தெரி­யும். எனி­னும், இயக்­கு­நர் சொல்­வ­தைக் கேட்டு நடிப்­ப­து­தான் ஒரு நடி­கை­யின் கடமை என்­ப­தால் அவ்­வாறு செய்­தேன். அதற்­காக மொத்­தப் படக்­கு­ழுவும் என்­னைப் பாராட்­டி­ய­போது கிடைத்த மன­நி­றைவு அலா­தி­யா­னது,

"இன்னும் எத்தனை ஆண்டுகள் திரையுலகில் நீடிப்பேன் எனத் தெரியாது. அதுவரை நல்ல படங்களில் நடிப்பேன்," என்கிறார் அதிதி.