சூர்யா தற்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து
உள்ளது.
ஏற்கெனவே 'கோலமாவு கோகிலா', 'கனா', 'டாக்டர்' போன்ற படங்களுக்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள்
பட்டிதொட்டி எங்கும் பலராலும் விரும்பி
கேட்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்தப் படத்திலும் அவர் எழுதியுள்ள பாடல் மீதான எதிர்பார்ப்பு இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையும் அதிகரித்துள்ளது.

