‘சர்ச்சையான விஷயங்களுக்கு சூர்யா காரணம் இல்லை’

இத்தனை நாட்களாக மௌனம் சாதித்த 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "இந்­தப் படத்­தில் சில

சர்ச்­சை­யான விஷ­யங்­க­ளுக்கு சூர்யா காரணம் இல்லை. நான் மட்­டுமே காரணம். அத­னால் அவ­ரி­டம் முத­லில் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று அறி­வித்­துள்­ளார்.

1990களில் ராஜ்­கண்ணு,

வீர்­ப­லிங்­கம் போன்ற பழங்­கு­டி­யின மக்­க­ளின் இறப்பு, ஒடுக்­கப்­பட்ட சமூ­கத்தைச் சேர்த்த சில பெண்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­, இன்­ற­ள­வும் பழங்­கு­டி­யி­னர் அனு­ப­விக்­கும் துய­ரம் ஆகியவற்றை வெளி­யு­ல­கிற்கு எடுத்­துக்­காட்­ட­வும் அவர்­க­ளின் வலிகளைப் பிர­தி­ப­லிக்­கும் நோக்­கிலும்தான் நான் இந்தப் படத்தை எடுத்­தேன்.

இத்­த­கைய ஏழை, எளிய மக்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளுக்கு

எதி­ராக கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­ன­ரும் பல மனித உரிமை அமைப்­பு­களும் இணைந்து பல்­வேறு போராட்­டங்­களை நாள்­தோ­றும் நடத்தி வரு­கின்­ற­ன.

அது­மட்­டு­மல்­லாது நீதி­பதி சந்­துரு வழக்­க­றி­ஞ­ராக இருந்­த­போது ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக போரா­டி­னார். இதன்மூலம் காவல்­து­றை­யும் நீதித்துறை­யும் ஒன்­றி­ணைந்­தால் அனை­வ­ருக்­கும் நீதி கிடைக்­கும் என்­பதை உணர்த்­தும் நோக்­கி­லேயே இந்தப் படத்தை உரு­வாக்­கி­னோம்.

மேலும் தமி­ழக முதல்­வர் 'ஜெய் பீம்' படத்தைப் பார்த்து பாராட்­டி­ய­தோடு தின­மும் துன்பப்படும் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் கோரிக்­கை­கள் அனைத்­தை­யும் நிறை­வேற்று­வேன் என்று தெரி­வித்துள்ளார்.

இந்தப் படத்­திற்கு பலரி­ட­மி­ருந்து வர­வேற்பு கிடைத்­தது எனக்கு

மகிழ்ச்­சியை அளித்­தது. ஆனால் அந்த காலண்­டர் விவ­கா­ரம் இப்­படி ஒரு

பூகம்­பத்தைக் கிளப்­பும் என்று நான் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை.

1995 கால­கட்­டத்தை பிர­தி­ப­லிப்

­ப­தற்­கா­கவே நான் அந்தக் காலண்­டரை வைத்­தேன். ஒரு சமூ­கத்தை

குறிப்­ப­து­போல் நான் அதைப் பயன்

­ப­டுத்­த­வில்லை.

சில வினா­டி­கள் மட்­டுமே இடம்­

பெ­றும் அந்தக் காட்­சியை நாங்­கள் இறு­திக்­கட்­டப் பணி­க­ளின்­போதுகூட கவ­னிக்­க­வில்லை. மேலும் அமே­சான் பிரை­மில் வெளி­யி­டு­வ­தற்கு முன்­னர் பெரிய திரை­யில் இப்­ப­டத்தைத் திரை­யிட்டு பல்­வேறு தரப்­பி­ன­ருக்­கும்

காட்­டி­னோம். அவர்­களும் அது­கு­றித்து ஒன்­றும் கூற­வில்லை.

மேலும் படம் வெளியான மறு­நாள் காலண்­டர் விவ­கா­ரம் குறித்து நான் சமூக வலைத்­த­ளத்­தில் தெரிந்து கொண்டேன். உடனே அந்தக்

காட்­சியை நீக்­கி­னேன். இந்த தவ­றுக்கு இயக்­கு­ந­ரா­கிய நான்­தான் பொறுப்­பேற்க வேண்­டும். அத­னால் சூர்­யாவை

பொறுப்­பேற்கச் சொல்­வது எந்த

விதத்­தி­லும் நியா­யம் ஆகாது.

இத்­தி­ரைப்­ப­டத்­தில் சூர்யா நடி­க­ரா­க­வும் தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் பழங்­கு­டி­யி­னர் படும் துய­ரங்­களைப் பிர­தி­ப­லிப்­பது

ஒன்­றையே நோக்­க­மாக கொண்­டி­ருந்­தார். என்­னால் அவ­ருக்கு ஏற்­பட்ட இந்த சிர­மத்­திற்கு நான் அவ­ரி­டம்

மன்­னிப்புக் கேட்டுக்கொள்­கி­றேன்.

இந்தப் படத்தால் வேதனை அடைந்த வர்களிடமும் நான் மன்னிப்பைத் தெரிவித்துகொள்கிறேன். மேலும் இப்பேற்பட்ட இந்த நெருக்கடியில் எங்களுக்கு ஆதரவு தந்த மக்கள், திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோருக்கு இந்த இக்கட்டான நேரத்தில் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

பூதாகரமாகக் கிளம்பும் 'ஜெய் பீம்' படப் பிரச்சினை - மன்னிப்புக் கேட்ட இயக்குநர்

'ஜெய் பீம்' படத்தில் வழக்கறிஞராக நடித்த சூர்யா, செங்கேணியாக நடித்த லிஜிமோல் ஜோஸ், அவரின் மகளாக நடித்த சிறுமி ஜோசிகா மாயா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!