முதன்முறையாக சியான் விக்ரமை வைத்து இயக்குநர் கௌதம் மேனன் 'துருவ
நட்சத்திரம்' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார்.
பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும்
இந்தப் படத்தில், விக்ரம் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 'துருவ'
நட்சத்திரம் படத்தின் பெரும்பாலான
காட்சிகள், துருக்கி, ஜார்ஜியா உள்ளிட்ட வெளிநாடுகளில் 2018ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டன. பொருளாதாரப் பிரச்சினை காரணமாக எஞ்சியுள்ள காட்சிகளை முடிக்க முடியாமல் போனது.
அதனால் நடிகர் விக்ரம் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்', 'மகான்' என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடிக்கத் தொடங்கியதால் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு நின்று போனது.
கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இப்
படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க நடிகர்
விக்ரம் அண்மையில் 15 நாட்கள் ஒதுக்கி இருந்தார்.
ஆனால் இயக்குநர் கௌதம் மேனன் படப்பிடிப்பைத் தொடங்காமல்
விக்ரமை முதலில் குரல் பதிவு செய்யச் சொன்னதால், தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 'துருவ நட்சத்திரம்' படத்தை மீண்டும் தொடங்கு
வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். அவர்களுடன் சிம்ரன், ராதிகா, டிடி மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் தாமதம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பேட்டியொன்றில் கூறிய பார்த்திபன், "நான் சிறுவயதில் நடித்த படம்," என்று பேசியிருந்தார்.
இது படக்குழுவினர் மத்தியில்
கவலையை ஏற்படுத்தியது. தற்போது
மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தைக் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், "துருவ நட்சத்திரம்' படத்தின் உதவி இயக்குநர் பார்த்தியின் இயக்கத்தில் இது! இவர் இயக்குநராகும்போது 'துருவ நட்சத்திரம்' வெளியாக வாழ்த்துகள்," என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன். மேலும், பார்த்தி இயக்கியுள்ள குறும்படத்தையும் பகிர்ந்துள்ளார்
இந்த டுவிட்டால் படக்
குழுவினர் பெரும்
அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டே, படத்தைக் கிண்டல் செய்வது சரியல்ல என்று படக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவித்தனர்.