தமிழகத்தில் திரையரங்குகள் நூறு விழுக்காடு திறக்கப்பட்டதையடுத்து முன்னணி நாயகர்
களின் படங்கள் வேகமாக
திரைகாண இருக்கின்றன. அதன்படி அதிக பொருட்
செலவில் எடுக்கப்பட்ட நான்கு படங்கள் தொடர்ந்து 2022 ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாக இருக்கின்றன. அதனால் தங்கள்
அபிமான நடிகர்களின் படங்
களுக்காக காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல வியாபாரங்கள் முடங்கின. திரைப்
படங்களும் வெளிவர முடியாமல் தள்ளிப் போயின. படப்பிடிப்பு நடத்த முடியவில்லை, நடந்தாலும் குறைந்த ஆட்களை வைத்தே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.
அதனால் திரைத்துறையினர் பல
சிரமங்களுக்கு ஆளானார்கள்.
இதன் காரணமாக குறிப்பிட்ட தேதிகளில் படங்களை வெளியிட முடியவில்லை. தற்போது கொரோனா தொற்று மெல்ல குறைந்து வருவதால் தள்ளிப்போன படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நாயகர்
களின் படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவர உள்ளன. விஜய், அஜித், சூர்யா, கமல், சிவகார்த்திகேயன், விக்ரம், தனுஷ் என்று தமிழ்த் திரையின் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிவர உள்ளன.
விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் 'பீஸ்ட்' திரைப்
படம் தற்போது படப்பிடிப்பு
முடியும் தறுவாயில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதே மாதத்தில் கமல் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'விக்ரம்' படமும் வெளிவர உள்ளது. விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படம் 'பீஸ்ட்' படத்துடன் மோத அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அஜித் - வினோத் கூட்டணியில் எடுக்கப்பட்ட இரண்டாவது படமான 'வலிமை' வரும்
பொங்கல் அன்று திரையரங்கில் வெளிவர உள்ளது. சில ஆண்டு
களாக எடுக்கப்பட்டு வரும் இப்
படம் வெளியிடும் தேதி
முடிவாகாமல் தள்ளிப் போய்க்கொண்டு இருந்தது. அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளிவந்து ரசிகர்
களிடம் நல்ல வரவேற்பைப்
பெற்றுள்ளது.
சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவான 'எதற்கும் துணிந்தவன்' படம் 'வலிமை' படத்துடன் மோத இருந்தது. இறுதியில் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அண்மையில் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம்
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'. அதன் பிறகு அவர் நடித்து வரும் 'டான்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து உள்ளனர். இரண்டு பாகங்களாக வெளி
வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வரும்
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவர உள்ளது.
தனுஷ் நடிக்கும் 'மாறன்' மற்றும்
விக்ரம் நடிக்கும் 'மகான்' படங்கள் ஜனவரி - ஏப்ரல் மாதத்தில் வெளிவர உள்ளன. இந்த இரண்டு படங்களும் நேரடியாக 'ஓடிடி'யில் வெளிவர பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இவற்றுடன் 'ஆர்ஆர்ஆர்', 'புஷ்பா', 'ராதே சியாம்' போன்ற பெரிய படங்களும் இந்த காலகட்டத்தில் வெளிவர உள்ளன.