தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் எழும்பூரில் வசித்து வருகிறார்.
இவர் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கி இருக்கிறார். நான்கறை வீடு மற்ற ஏரியாவைவிட போயஸ் ஏரியாவில் அதிக விலை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கைநிறைய படங்களை வைத்துள்ள நயன்தாராவிற்கு இரண்டு வீடுகள் வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்கின்றனர் அவரின் நலன் விரும்பிகள்.
அவரின் நண்பர் தனுஷும் மாமனார் ரஜினிகாந்தின் வீடு அருகே பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'மாயா' படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் 'கனெக்ட்' படத்தில் தற்போது கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
"நான் எனது 522வது படத்தில் நயன்தாரா, அஸ்வின் சரவணன், விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைகிறேன். எனக்கு வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றி," என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார் இந்தி நடிகர் அனுபம்கெர்.