நடிகை சமந்தா தொடர்ந்து நல்ல கதைகள் உள்ள படங்களைத்
தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழில்
உருவாகிவரும் 'சாகுந்தலம்', தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படங்கள் இவரது நடிப்பில் வெளியாக
உள்ளன.
முன்னதாக தனது இரண்டு ஆண்டு திருமண
வாழ்க்கையைக் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி விவாகரத்து முடிவின் மூலம் நிறைவு செய்துள்ளார் சமந்தா. அவரது இந்த முடிவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி
ரசிகர்களும் இந்த முடிவால் அதிர்ந்து போனார்கள்.
இந்நிலையில் தனது முன்னாள் மாமனார்
நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவிற்கு அவர் திடீரென சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் அங்கு சென்றார்? என்பது குறித்து ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திய நிலையில், அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் குரல் பதிப்பு பணிகள் அங்கு நடைபெற்று வருவதால் அங்கு சென்றதாக சமந்தாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.