ஆந்திராவில் சினிமா நட்சத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் குறிப்பாக அவர்களது
ரசிகர்களிடம் மரம் நடும் விழிப்புணர்வு
பிரசாரத்தை ஊக்கப்படுத்தி வருபவர் ஆந்திர மாநில எம்பி சந்தோஷ்குமார்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' என்ற பெயரில் வலைத்தளங்களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி தெலுங்கு நடிகர் சுஷாந்த், பூஜா ஹெக்டேக்கு விடுத்த 'கிரீன் இந்தியா' சவாலை பூஜா வெற்றிகரமாக நிறைவேற்றி, மரத்தைப் படம்பிடித்து வலைத்தளத்தில்
பதிவிட்டு இருக்கிறார்.
அதைப் பார்த்த சுஷாந்த், "நீங்கள் இன்று செய்ததைப் பார்த்து உங்களது ரசிகர்களும் உங்களைத் தொடர்வார்கள். நல்ல காரியம் செய்தீர்கள்," என்று பதிவிட்டுள்ளார்.