'நான் இந்திய நடிகை'

'நான் இந்திய நடிகை'

3 mins read
51618db3-0162-4443-baee-44c2406b6daa
-

தமிழ்த் திரை­யு­ல­கில் இனியா அறி­மு­க­மாகி பத்து ஆண்­டு­கள் ஆகி­விட்­ட­தாம். இதை அவரே கண்­களை விரித்து ஆச்­ச­ரி­யத்­து­டன் சொல்­கி­றார்.

தற்­போது எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் இயக்­கும் 'நான் கட­வுள் இல்லை' படத்­தில் நடித்து வரும் இனியா, வாய்ப்­பு­க­ளுக்­காக தாம் எப்­போ­துமே மெனக்­கெட்­டது இல்லை என்­கி­றார்.

"தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­தால் தமி­ழுக்கு முக்­கி­யத்­து­வம் தரு­வேன். தாய்­மொழி மலை­யா­ளம் என்­ப­தால் அதை­யும் மறக்­க­மாட்­டேன். அங்கு நல்ல கதை வரும்­போது நடிக்­கி­றேன்.

"இப்­போது பல மொழி படங்­களில் நடிப்­ப­தால் இந்­திய நடிகை என்று குறிப்­பிட்­டால் பெரு­மி­தம் அடை­வேன்," என்று சொல்­லும் இனியா, தற்­போது சாய் கிருஷ்ணா இயக்­கும் 'காஃபி', ராம்­நாத் இயக்­கத்­தில் 'ஆதார்', ஹரீஷ் இயக்­கும் 'இஷ்' ஆகிய படங்­களில் நடித்து வரு­கி­றார்.

கொரோனா பெருந்­தொற்று மிகப்­பெ­ரிய வாழ்க்­கைப் பாடத்­தைக் கற்­றுக்­கொ­டுத்­த­தாக குறிப்­பி­டு­ப­வர், வாழ்க்­கையை நின்று நிதா­னித்­துப் பார்க்க கொரோனா ஊர­டங்கு காலம் உத­வி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"நேரத்­தின் முக்­கி­யத்­து­வம், குடும்­பத்­தி­ன­ரு­டன் மனம்விட்டுப் பேசு­வது எவ்­வ­ளவு அவ­சி­யம் என்று புரிந்­தது. சினிமா நட்­சத்­தி­ர­மாக இருப்­ப­தால் சரி­யான நேரத்­துக்­குத் தூங்க முடி­யாது, ஓய்வு எடுக்க நேரம் கிடைக்­காது, நேரத்­துக்கு சாப்­பிட முடி­யாது.

"ஆனால், ஊர­டங்கு வேளை­யில் நீண்ட ஓய்வு கிடைத்­த­தால் நிறைய விஷ­யங்­கள் குறித்து உணர்­வு­பூர்­வ­மா­கச் சிந்­திக்க முடிந்­தது.

"என்­னைப் பொறுத்­த­வரை ஒவ்­வொரு வரு­ட­மும் ஏதா­வது ஒரு புது விஷ­யத்­தைக் கற்­றுக்­கொள்­வேன். ஊர­டங்­கின்­போது இணை­யம் வழி நட­னப்­பயிற்­சியை மேற்­கொண்­டேன்.

"பழைய நடன அசை­வு­களை, நுணுக்­கங்­களை அசை­போட்­டுப் பார்க்க முடிந்­தது. மிக முக்­கி­ய­மாக, புது மொழி­களை கற்­றுக்­கொள்ள முயன்­றேன். அதற்கு ஓர­ளவு பலன் கிடைத்­துள்­ளது," என்­கி­றார் இனியா.

இவ­ருக்கு திரை­ய­ரங்­கில் படம் பார்ப்­பது­தான் பிடிக்­கு­மாம். ஆனால், ஊர­டங்­கின்­போது ஓடிடி தளங்­களில் படம் பார்க்கத் தொடங்கி இப்­போது அதுவே பழ­கி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

இனி­யா­வின் சகோ­த­ரி­யும் திரை­யு­ல­கில் இருப்­ப­தால் அடிக்­கடி சந்­தித்­துக்­கொள்­வ­தில்லை. இந்த வருத்­தத்தை ஊர­டங்கு போக்கி உள்­ளது.

திரை­யு­ல­கி­லும் ரசி­கர்­க­ளி­ட­மும் தமக்கு நல்ல பெயர் வாங்­கிக்­கொ­டுத்த படங்­களில் 'வாகை சூடவா' படத்­துக்­குத்­தான் எப்­போ­துமே முதல் இடம் என்று குறிப்­பி­டு­ப­வர், அப்­ப­டம் வெளி­யாகி பத்­தாண்­டு­கள் ஆகி­விட்ட போதி­லும், ரசி­கர்­கள் அதை மறக்­க­வில்லை என்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"அந்­தப் படத்­தில் இப்­போ­து­தான் நடித்து முடித்த மாதிரி இருக்­கிறது. பத்து ஆண்­டு­கள் வேக­மாக கடந்­து­விட்­டன. வய­தும் வரு­ட­மும் போவது தெரி­யாது என்­பார்­கள். என் விஷ­யத்­தில் அது­தான் நடந்­துள்­ளது.

"தமிழ், தெலுங்கு, மலை­யா­ளத்­தில் ஏரா­ள­மான படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும் 'வாகை சூடவா'வை என்­னு­டைய அடை­யா­ள­மாக இப்­போ­தும் ரசி­கர்­கள் குறிப்­பி­டு­கி­றார்­கள். தேசிய விருது பெற்ற படம் என்­ப­தால் தமி­ழில் பெரிய திருப்­பு­மு­னை­யைக் கொடுத்­தது.

"தமி­ழில் நாய­கி­யாக நடிக்க ஆரம்­பித்த பிற­கு­தான் மலை­யா­ளத்­தில் நாய­கி­யாக நடிக்க வாய்ப்­பு­கள் வர ஆரம்­பித்­தன," என்று சொல்­லும் இனியா, தனது வளர்ச்­சிக்கு கார­ண­மான அந்­தப் படத்தை இயக்­கிய சற்­கு­ணம், ஒளிப்­ப­தி­வா­ளர் ஓம் பிர­காஷ், நாய­கன் விமல் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­விப்­ப­தாக கூறு­கி­றார்.

'நான் கட­வுள் இல்லை' படத்­தில் சமுத்­தி­ரக்­க­னி­யு­டன் நடித்­துள்­ளார் இனியா.

இயக்­கு­நர் எஸ்.ஏ.சந்­தி­ர­சே­க­ரின் சுறு­சு­றுப்­பான செயல்­பா­டும் படத்தை இயக்­கும் வித­மும் தம்மை ஆச்­ச­ரி­யப்­பட வைப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

"மிகப் பெரிய இயக்­கு­நர், நடி­கர் விஜய்­யின் தந்தை என்­பதை எல்­லாம் கடந்து, மிக­வும் நட்­பா­கப் பழ­கு­கி­றார்.

"இளை­ஞ­ரா­க­வும் தேவைப்­பட்­டால் குழந்­தை­யா­க­வும் மாறி­வி­டு­வார்.

"அவ­ரது நினை­வாற்­றல் அபா­ர­மா­னது. எத்­தனை பக்க வச­ன­மாக இருந்­தா­லும் எழுதி வைத்­த­தைப் பார்க்­கா­மல் அப்­ப­டியே சொல்­லித் தரு­வார். அவ­ரைப்­போன்ற அனு­பவ இயக்­கு­ந­ரின் இயக்­கத்­தில் நடிக்­கும்­போது திரை­யு­ல­கம் சார்ந்த பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முடி­கிறது. 'நான் மகான் அல்ல' படம் விரை­வில் வெளி­யீடு காணும்," என்­கி­றார் இனியா.

, :   

இனியா