காதலர் தினத்தில் வருகிறார் 'டான்'

3 mins read
5990bfb6-e985-43c2-bcf5-33659942f373
-

தன்­னு­டைய திறமை மூலம்

முன்­னுக்கு வந்­த­வர்­களில் ஒரு­வர் சிவ­கார்த்­தி­கே­யன். இவ­ரு­டைய நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'டாக்­டர்' படம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற்­றது. அத­னைத்

தொடர்ந்து இவர் நடிக்­கும் 'டான்' படம் காத­லர் தினத்­தன்று வெளி­யாக இருப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கின்­ற­னர்.

சிவ­கார்த்­தி­கே­யன் தனி­யார் தொலைக்­காட்­சி­யில் ஒரு தொகுப்­பா­ள­ராக முதன்­மு­த­லாக பணி­செய்து அதன் மூலம் விளம்­ப­ரங்­களில் நடித்து, பிர­ப­ல­மாகி,

மற்­றொரு தொலைக்­காட்­சி­யில் முக்­கிய நிகழ்ச்­சி­யைத் தொகுத்து வழங்கி தன்­னு­டைய திற­மை­யைக் காட்டி, அதில் வெற்றி பெற்று, பின்­னர் மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் திரை­யில் முன்­னணி நாய­க­னாக வலம் வரு­கி­றார்.

சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'டாக்­டர்' படம் ரசி­கர்­க­ளி­டம் அமோக

வர­வேற்­பைப் பெற்­றது.

இந்­தப் படத்­தைத் தொடர்ந்து அட்­லீ­யி­டம் உதவி இயக்­கு­ந­ராகப் பணி­யாற்­றிய அறி­முக இயக்­கு­நர் சிபி சக்­க­ர­வர்த்தி இயக்­கும் 'டான்' படத்­தில் நடிக்க ஒப்­பந்­தம் ஆனார்.

கடந்த பிப்­ர­வரி மாதம் 'டான்' படத்­திற்­கான பூஜை போடப்­பட்டு, முதற்­கட்ட படப்­பி­டிப்பு நிறைவு பெற்­றது.

இடை­யில் கொரோனா இரண்­டாம் அலை அச்­சத்­தால் நிறுத்தி வைக்­கப்­பட்ட சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'டான்' படப்­பி­டிப்பு கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு சென்­னை­யில் மீண்­டும் துவங்­கி­யது.

அண்­மை­யில் இந்­தப் படத்­தின் இறு­திக்­கட்ட படப்­பி­டிப்பு விறு

விறுப்­பாக நடை­பெற்று முடிந்து உள்­ளது.

இந்­தப் படத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் மற்­றும் சூரி ஆகிய இரு­வ­ரும் கல்­லூரி மாண­வர்­க­ளாக நடிக்­கின்­ற­னர்.

பிரி­யங்கா அருள்­மோ­கன் நாய­கி­யாக நடிக்­கும் இந்­தப் படத்­தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்­கட் உள்­பட பலர் நடிக்­கின்­ற­னர்.

அனி­ருத் இசை­ய­மைக்­கும்

இந்­தப் படத்தை லைக்கா நிறு­வ­னத்­து­டன் இணைந்து சிவ­கார்த்­தி­கே­யன் புரொ­டக்­‌ஷ­சன்ஸ் தயா­ரித்து இருக்­கிறது.

இந்­நி­லை­யில் அண்­மை­யில் படத்­தின் குரல் பதிப்பு பணி­கள் துவங்­கி­யுள்­ள­தாக லைக்கா நிறு­வ­னம் அறி­வித்­தது. அதில்

சிவ­கார்த்­தி­கே­ய­னும் சூரி­யும் தங்­கள் குரல் பதிப்பு பணி­களை நிறைவு செய்து படத்­தின் இறு­திக்­கட்­டப் பணி­கள் நடந்து வரு­கின்­றன.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்­பாக 'டான்' படத்­தின் முதல்

சுவ­ரொட்­டி­யும் வெளி­யாகி ரசி­கர்

களி­டம் வர­வேற்­பைப் பெற்­றது.

'டான்' படத்தை இந்­தாண்டு

இறு­தி­யில் கிறிஸ்­மஸ் விடு­மு­றை­யில் வெளி­யிட திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால் அந்த சம­யத்­தில் அதிக பொருட்­செ­ல­வில் தயா­ரிக்­கப்­பட்ட படங்­கள் வெளி­யா­வ­தால் 'டான்' படத்­தின் வெளி­யீடு தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் தற்­போது வெளி­யா­கி­யுள்ள தக­வ­லின்­படி 'டான்' படத்தை அடுத்­தாண்டு பிப்­ர­வரி மாதம்

14ஆம் தேதி காத­லர் தினத்தை முன்­னிட்டு வெளி­யிட முடிவு செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­தச் செய்தி சிவ­கார்த்­தி­கே­யன் ரசி­கர்­கள் மத்­தி­யில் உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிவ­கார்த்­தி­கே­ய­னின் நண்­பர் நகைச்­சுவை நடி­கர் சதீஷ். இவர் நாய­க­னாக நடிக்­கும் படம் 'நாய் சேகர்'. 'நாய் சேகர்' என்­ற­தும் 'தலை­ந­க­ரம்' படத்­தில் வரும் வடி­வே­லு­வின் வேடம்­தான் பல­ருக்­கும் நினை­வு­வ­ரும். இதே பெய­ரில் வடி­வே­லுவை வைத்து சுராஜ் ஒரு படத்தை இயக்கி வரு­கி­றார்.

அந்தப் படத்திற்கு முன் சதீஷ் நடித்­தி­ருக்­கும் 'நாய் சேகர்' படத்தை வெளி­யிட இருக்­கின்­ற­னர். இந்­தப் படத்­தில் நண்­ப­ருக்­காக ஒரு பாடலை எழு­தி­யுள்­ளார் சிவ­கார்த்­தி­கே­யன்.

இதற்கு முன் விஜய்­யின் 'பீஸ்ட்', சூர்­யா­வின் 'எதற்­கும் துணிந்­த­வன்' படங்­க­ளி­லும் சிவ­கார்த்­தி­கே­யன் தலா ஒரு பாடல் எழு­தி­

யி­ருந்தது குறிப்பிடத்தக்கது.