கீர்த்தி சுரேஷ் பிரபல ஓவியர் ரவி வர்மாவின் ஓவியத்தைப் பார்த்து அதுபோலவே அலங்காரம் செய்துகொண்டு 'மரைக்காயர் அரபிக்கடலின்டே
சிம்மம்' என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.
மலையாளப் படங்களிலேயே அதிகப் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.
67வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த 'ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்', சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்காக விருதுகளை வென்றுள்ளது 'மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்மம்' படம். பாரம்பரிய மலையாளப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் தோன்றி அனைவரின் மனங்
களையும் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனது கதாபாத்திரத்தின் பின்னணி ரகசியத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
"மரைக்காயர் படத்தில் 'ஆர்சா' என்ற வேடத்தில்தான் நடித்திருக்கிறேன். எனது வேடத்திற்கு ஏற்ற ஆடை வடிவமைப்புக்கு ஆதாரம் ரவிவர்மாவின் ஓவியங்கள்தான்," என்று அசல், நகல் படங்களைத் தன்னுடைய வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
பழங்கால ராணியைப்போலக் காட்சியளிக்கும் கீர்த்தி
சுரேஷின் அழகை வர்ணித்து
அத்துடன் அவரின் படத்தையும் தங்களுடைய வலைத்தளங்களில் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர் கீர்த்தி சுரேஷின்
ரசிகர்கள்.

