விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 36 நாள்கள் இந்தப் படப்பிடிப்பை இரவு, பகல் பாராமல் நடத்தி முடித்தால்தான் குறித்த நேரத்தில் படத்தை வெளியிட இயலும் என்கிறது தயாரிப்புத் தரப்பு.
விஜய்யும் இதை உணர்ந்து இருப்பதால், படப்பிடிப்புக்கு இடையில் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, சலித்துக் கொள்ளாமல் நடித்து வருகிறாராம்.
சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்டூடியோவில்தான் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. எந்த இடம் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பின்போது முக்கிய பிரமுகர்கள் வந்தாலும்கூட உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று இயக்குநர் தரப்பு கண்டிப்புடன் கூறிவிட்டதாம். படத்தின் கதை, விஜய்யின் தோற்றம் என்று எதுவும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதுதான் இந்த நிபந்தனைக்குக் காரணம்.

