1830களில் சென்னை வந்த ஆங்கிலேய வர்த்தகர் 'போய்' என்பவர் அங்குள்ள கதீட்ரல் சாலைக்கும் எல்டாம்ஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டையுடன் எல்லைத் தொடர்பு கொண்ட பகுதியில் பங்களா போன்ற ஒரு பெரிய வீடு கட்டி வசித்திருக்கிறார்.
இயற்கையோடு இழைந்து வாழும் விதமாக, மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் வசித்ததால் 'போய் கார்டன்' என்று அப்பகுதி அழைக்கப்பட்டது. பின்னர் அது 'போயிஸோட கார்டன்' (Poe's Garden) என்பதைக் குறிக்கும் வகையில் 'போயஸிஸ் கார்டன்' என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது. நாளடைவில் அந்தச் சொல் மருவி, 'போயஸ் கார்டன்' என்றானது. இதுதான் போயஸ் கார்டனின் வரலாறு என சென்னை குறித்த சில ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பதாக அப்பகுதியின் மூத்த குடிமக்கள் தெரிவிக்கிறார்கள்.

