போயஸ் தோட்டத்தில் புது 'நட்சத்திரம்'

போயஸ் தோட்டத்தில் புது 'நட்சத்திரம்'

4 mins read
5921e7b4-0286-42d6-a863-d011d0f881ba
-
multi-img1 of 3

சதீஷ் பார்த்திபன்

இந்­திய அர­சி­ய­லின் குறிப்­பி­டத்தக்க கவன ஈர்ப்பு மையங்­களில் ஒன்­றா­கத் திகழ்ந்­தது சென்னை போயஸ் தோட்­டம். கார­ணம், ஜெய­ல­லிதா!

தெருக்­க­ளின் சுத்­தம், சுகா­தாரம், சாலை­யோர மரங்­கள், வழ­வழப்­பான சாலை­கள், காரணமின்றி எவ­ரும் நுழைய முடி­யா­த­படி பாது­காப்பு, தடை­யற்ற மின், நீர் விநி­யோ­கம் என அது ஒரு தனி உல­கம்­தான்.

இந்த போயஸ் உல­கத்தை மேலும் அழ­காக்க நடிகை நயன்­தாரா இங்கே குடி­யே­று­கி­றார். அதற்கு முன், போயஸ் தோட்­டத்­தின் கதை என்ன என்­பதை பறவைப் பார்­வை­யில் பார்க்­க­லாம் வாங்க.

1967ல் குடி­யே­றிய ஜெய­ல­லிதா

தன் தாயார் சந்­தி­யா­வு­டன் இணைந்து 1967ஆம் ஆண்­டி­லேயே 130,000 ரூபாய் கொடுத்து 2,400 சதுர அடி இடத்தை வாங்கி வீடு கட்­டி­னார் ஜெய­ல­லிதா. அதன் பின் 1980களில் எம்­ஜி­ஆர் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை வைத்து வீட்டை விரி­வு­ப­டுத்­திக் கட்­டி­னார்.

1990களுக்­குப் பின், இந்­திய அர­சி­ய­லின், குறிப்­பாக தமி­ழக அர­சி­ய­லின் அதி­கார மைய­மாக விளங்­கி­யது ஜெய­ல­லி­தா­வின் வெள்ளை மாளிகை. அவ­ரது மறைவுக்­குப் பின் அந்­தப் பகு­தியில் அதி­கார பர­ப­ரப்பு குறைந்து போய்­விட்­டா­லும்­கூட போயஸ் தோட்­டத்­தின் கௌர­வம் உயர்ந்­து­கொண்டே­தான் போகிறது.

சென்­னை­யில் நில மதிப்பு அதி­கம் உடைய இரண்டு பகு­தி­கள் போயஸ் தோட்­ட­மும் அடை­யாறு 'போட் கிளப்' பகு­தி­யும்தான்.

ரஜி­னி­காந்த், கார்த்­திக், ஜெயம்­ரவி உள்­ளிட்ட பல நட்­சத்­தி­ரங்­களும், தினத்­தந்தி நாளி­தழ் அதிபர் உள்­ளிட்ட பிர­ப­லங்­களும் போயஸ் தோட்­டத்­தில்­தான் வசிக்­கி­றார்­கள். பணம் வைத்­தி­ருப்­ப­வர்­கள் எல்­லாம் இங்கே நிலம் வாங்க முடி­யாது. சொத்து முகவர்­க­ளி­டம் முன்­கூட்­டியே விருப்­பத்தை தெரி­வித்து முன்­ப­திவு செய்­து­தான் சில, பல ஆண்­டு­கள் காத்­தி­ருந்­து­தான் வாங்க முடி­யும்.

"அது­வும் காலி மனை­கள் கிடைக்­காது. பழைய வீட்டை வாங்கி, அதை இடித்­து­விட்டு புது பங்­களா கட்ட முடி­யும். இது 'வேற லெவ'லில் இருப்­ப­வர்­கள் வசிக்­கும் பகுதி," என்­கி­றார்­கள் சென்­னை­யைப் பற்றி நன்கு அறிந்­த­வர்­கள்.

மாம­னார் வீட்­டுக்கு எதிரே புது­வீடு கட்­டும் தனுஷ்

கொஞ்ச நாளாய் அடங்­கிக்­கிடந்த போயஸ் பர­ப­ரப்பு மீண்­டும் கடந்த பிப்­ர­வரி 10ஆம் தேதி சூடு­பி­டித்­தது. ஏனென்­றால், நடி­க­ரும் ரஜி­னி­யின் மூத்த மரு­ம­க­னு­மான தனுஷ் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்­பில் மூன்று கிர­வுண்ட்­டில் வீடு கட்ட பூசை போட்­ட­து­தான்.

தன் மனைவி ஐஸ்­வர்யா, இரு மகன்­க­ளு­டன் சென்னை ஆழ்­வார்­பேட்­டை­யில் ஒரு அடுக்­கு­மாடி குடியி­ருப்­பின் ஒன்­ப­தா­வது தளத்­தில் வசித்து வந்­தார் தனுஷ்.

மூத்த மகள் ஐஸ்­வர்யா மீது ரஜினிக்கு பாசம் அதி­கம். அதோடு பேரப்­பிள்­ளை­கள் மீதும் ரொம்­பப் பிரி­யம். அத­னால் படப்­பி­டிப்பு இல்லாத நாள்­களில் அங்கே சென்று­வி­டு­வார்.

அவ்­வாறு சென்று வரும்­போ­தெல்­லாம் குடி­யி­ருப்­பு­வா­சி­கள் கூட்­ட­மாக கூடு­வது, சிலர் காரை நிறுத்தி பேச முற்­ப­டு­வது உள்­ளிட்ட சில தொந்­த­ர­வு­கள் ஏற்­பட்­டன. மருத்­து­வர்­கள் அவரை முடிந்­த­வரை வெளி ஆட்களிடம் இ­ருந்து விலகி இருக்­கும்­படி கேட்­டுக் கொண்­ட­தால், பேர­னைப் பார்க்க வச­தி­யாக போயஸ் தோட்­டப் பகுதி­யி­லேயே குடி­யே­றும்­படி மாப்­பிள்­ளை­யி­டம் கேட்­டுக்கொண்­டார் ரஜினி. அதன்­படி, ஓரிரு வரு­டங்­க­ளுக்கு முன்பு எப்­ப­டியோ முன்­பதிவு செய்து, ரஜினி வீட்­டிற்கு எதிரே இருந்த பங்­களாவை வாங்கி இடித்து­விட்டு, சுமார் 100 கோடி ரூபாய் செலவில் புதிய வீடு கட்டி வருகிறார் தனுஷ்.

'போட் கிளப்'பில் திரிஷா; போயஸ் தோட்­டத்­தில் நயன்­தாரா

அடை­யாறு 'போட் கிளப்' பகு­தி­யில் தமிழ் சினி­மா­வின் முக்­கிய கதா­நா­யகி திரிஷா குடி­யி­ருக்­கி­றார்.

இன்­னொரு முக்­கிய பகு­தி­யான போயஸ் தோட்­டத்­தில் தமிழ் சினிமா­வின் இன்­னொரு முக்­கிய நாய­கி­யான நயன்­தாரா குடி­யே­று­கி­றார்.

இதற்­காக ஒரே அடுக்­கு­மா­டி­யில் நான்கு படுக்­கை­ய­றை­கள் கொண்ட இரண்டு வீடு­களை, அது­வும் எதிர் எதிர் வீடு­களை வாங்­கி­யி­ருக்­கி­றா­ராம் நயன். ஒவ்­வொரு வீடும் சுமார் 18 கோடி ரூபாய் என்­கிறது தக­வல் அறிந்த வட்­டா­ரம்.

விரை­வில் தன் காத­ல­ரான இயக்­கு­நர் விக்னேஷ் சிவனை திரு­ம­ணம் செய்து கொண்டு இல்­ல­றத்தை இந்த இல்­லத்­தில் இருந்­து­தான் தொடங்­க­விருக்­கி­றார் நயன்.

தங்­கத்­தில் முத­லீடு செய்யும் நயன்

நய­ன்தாரா வுக்கு தங்­கத்­திலும் குடி­யிருப்­பு­களி­லும் முத­லீடு செய்­வது வழக்கம். தங்­கத்­தில்­தான் அதிக முத­லீ­டும் செய்து வரு­கி­றார்.

ஏற்­கெ­னவே ஹைத­ரா­பாத்­தில் பிர­ப­லங்­கள் வசிக்­கும் பஞ்சாரா ஹில்ஸ் பகு­தி­யில் அடுக்­கு­மா­டிக் குடி­யிருப்பு வீடு வாங்­கி­யி­ருந்த நயன் அதை விற்றுவிட்டதா­க­வும் சொல்­கி­றார்­கள்.

பெரும்­பா­லும் சென்­னை­யில் உள்ள நட்­சத்­திர விடுதி­களில் தங்­கி­யி­ருந்த நயன் கடந்த சில ஆண்டு ­க­ளாக தன் காத­ல­ரு­டன் ஒரு குடி­யி­ருப்­பில் வாட­கைக்கு வசிக்­கி­றார்.

கேரளா திரு­வல்­லா­வில் நயன்­தா­ரா­வின் பூர்­வீக வீடு இருந்­தா­லும், கொச்­சி­யில் உள்ள தேவாரா பகு­தி­யில் பிர­ப­ல­மான 'மதர்ஸ்' அடுக்கு­மா­டிக் குடி­யிருப்­பில் ஒரு நவீன வீட்டை வாங்கி தன் பெற்­றோ­ருக்கு கொடுத்­துள்­ளார். அவர்­கள் அங்­கு­தான் வசிக்­கி­றார்­கள்.

இந்த வீட்­டுக்கு தன் 'குரி­யன் கொடி­யாட்டு இல்­லம்' என தன் தந்­தை­யின் பெயரை வைத்­துள்­ளார். ஓணம், கிறிஸ்­து­மஸ் பண்டி­கை­களை இந்த வீட்­டில்­தான் தன் காத­ல­ரு­டன் கொண்­டா­டு­வார் நயன். இப்­போது இல்­லற வாழ்­விற்­காக போயஸ் தோட்­டத்­தில் இரண்டு 'பிளாட்'களை வாங்­கி­உள்­ளார்.

, :  



நயன்தாரா

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா, ரஜினி வீடுகள் (இடமிருந்து வலமாக)

ஜெயலலிதா

ரஜினி

ஜெயம் ரவி

திரிஷா