கோலிவுட், டோலிவுட் என இருமொழிப்
படங்களிலும் அசத்திவரும் நடிகைகளுள் சமந்தா முதன்மையானவர். இவர் அண்மையில் 'புஷ்பா' படத்திற்காக நடனம் ஒன்றை ஆடியிருக்கிறார். அந்த நடனத்தைப்
படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
சமந்தா முன்னணி நாயகியாக பல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு குத்து நடனம் ஆட சம்மதித்தார். அதற்கு அவருக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் பேசபட்டதாக செய்திகள் வெளிவந்தன.
நடனத்திற்கான படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் பாடலில் வரும் சில காட்சி
களையும் படத்தின் வரிகளையும் அண்மையில் காணொளியாக வெளியிட்டு இருந்தது படக்குழு. அந்தக் காணொளி இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப் பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பாடல் ஆண்களைத் தவறான கண்ணோட்டத்தில் சித்திரித்து எழுதப்பட்டு இருப் பதாகவும் அதனால் இந்தப் பாடலைப் படத்திலிருந்து நீக்கவேண்டும் என்றும்
ஆந்திர நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப்படம் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளி வர உள்ளது.
தென்னிந்தியத் திரையுலகிலேயே ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது சமந்தாவிற்குத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப்போல சில நடிகைகளும் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்-2' படத்தில் ஒரு குத்துப் பாட்டிற்கு நடிகை அஞ்சலி நடனமாடியுள்ளார்.
'ஷாஜகான்' படத்தில் விஜய்யுடன் நடிகை மீனாவும் 'யூத்' படத்தில் விஜய்யுடன் நடிகை சிம்ரனும் 'நெஞ்சினிலே' படத்தில் விஜய்
யுடன் நடிகை ரோஜாவும் 'எதிர்நீச்சல்' படத்தில் தனுஷுடன் நயன்தாராவும் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இதற்கிடையில் இந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன், புஷ்பா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.
கொவிட்-19 காலகட்டத்தில் குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கடின உழைப்பைப் பாராட்டும் வகையில் தலா ஒரு துலாம்
அதாவது 11.66 கிராம் மதிப்புள்ள தங்க நாணயத்தைப் பரிசாக அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அனைத்து
தயாரிப்புப் பணியாளர்களுக்கும்
ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கியுள்ளார்.
அல்லு அர்ஜுனின் இந்தச் செயல், 'புஷ்பா' படக்குழுவினரை மட்டுமின்றி அவரது ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் பகத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துஉள்ளனர்.
அண்மையில் வெளியீடு கண்ட இப்படத்தின் முன்னோட்டக் காட்சியும் படத்தில் ராஷ்மிகா
மந்தனா குழுவினருடன் நடனமாடும் 'சாமி சாமி' பாடலும் பட்டி தொட்டியெங்கும் விரும்பிக் கேட்கப்பட்டு ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள 'புஷ்பா தி ரைஸ்', இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்
படங்களில் ஒன்றாகும்.
இந்தப் படத்தின் இயக்குநர் சுகுமார், சமந்தாவிற்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த 'ரங்கஸ்தலம்' என்ற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

